குழந்தையை கழுத்தறுத்து கொன்ற தந்தை-ஸ்டெபி ரோஸி-தாய் ரெபெகா
குழந்தையை கழுத்தறுத்து கொன்ற தந்தை-ஸ்டெபி ரோஸி-தாய் ரெபெகா

சென்னையில் குழந்தை கழுத்தறுத்து கொலை: உறவினர்கள் போராட்டம்

சென்னை ஓட்டேரியில் குடும்பத் தகராறில் குழந்தையை கழுத்தறுத்து கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தையை கைது செய்யக்கோரி தாயின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Published on

சென்னை ஓட்டேரியில் குடும்பத் தகராறில் குழந்தையை கழுத்தறுத்து கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தையை கைது செய்யக்கோரி தாயின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குழந்தையின் தாயை தந்தை செல்போனில் மிரட்டிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(38). அவரது மனைவி ரெபெகா(32). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஸ்டெபி ரோஸி என்கிற 7 வயதில் மகள் ஒருவர் இருந்தார். சதீஷுக்கும் அவரது மனைவி ரெபேகாவுக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு கடந்த ஒரு ஆண்டாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஓராண்டிற்கு முன்பு மனைவியை தாக்கியதாக சதீஷை ஓட்டேரி போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

சிறையில் இருந்து வெளியே வந்த சதீஷ், மனைவி ரபேகாவிடம் தொடர்ந்து பிரச்னை செய்து வந்துள்ளார். கடந்த 2 நாள்களுக்கு முன்பு மீண்டும் மனைவியுடன் சதீஷ் தகராறில் ஈடுபட்டது தொடர்பாக ரெபெகா ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் இருவரும் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீசார் அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தனது 7 வயது குழந்தை ஸ்டெபி ரோஸியை சதீஷ்குமார் அழைத்து சென்று ஆலந்தூரில் உள்ள தனியார் விடுதியில் அரை எடுத்து தங்கி உள்ளார்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை சதீஷ் தங்கி இருந்த அறையில் இருந்து ஸ்டெபி கழுத்தறுத்து இறந்து கிடந்துள்ளார். மேலும் சதீஷ் கழுத்தறுக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பரங்கிமலை போலீசார் உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சதீஷை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பரங்கிமலை போலீசார், குடும்ப பிரச்னை காரணமாக சதீஷ்குமார் குழந்தையை கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா அல்லது வேறு யாராவது இவர்களை கொலை செய்ய முயன்றார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக சதீஷ்குமாரின் மனைவி ரெபெகாவிடமும், அவரது குடும்பத்தாரிடமும் பரங்கிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் உடல்கூறாய்வுக்குப்பின் குழந்தையின் உடல் தாயிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் ஓட்டேரியில் சிறுமியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் கொலைக்கு காரணமாக இருந்த குழந்தையின் தந்தை சதீஷ் மற்றும் அவருடைய தாயரை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை எனக்கூறியும், உடனடியாக அவர்கள் இருவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி குழந்தையின் சடலத்தை வைத்து உறவினர்கள் ஓட்டேரி பகுதியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் குழந்தையின் தந்தை சதீஷ் தாய் ரெபேகாவை மிரட்டிய ஆடியோவும் வெளியாகி அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Relatives of the mother protest demanding the arrest of the father who attempted suicide by strangling his child in a family dispute in Otteri, Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com