தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்காங்கிரஸ் கட்சிக்கு திமுக கண்டனம்!பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்திமுக எம்எல்ஏக்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிப்பு!ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்! தொங்கு சட்டப்பேரவை என்பது என்ன? இதற்கு முன் தமிழகத்தில் நேரிட்டிருக்கிறதா?ராயபுரத்தில் வென்ற தவெகவின் ஆட்டோ இல்லாத ஆட்டோ ஓட்டுநர்!திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?ஆட்சியமைக்க அழைக்கப்படுவாரா விஜய்? ஆளுநர் மாளிகை விளக்கம்தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க புதுவை செல்கிறார் இபிஎஸ்! ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!
/

வெற்றிகரமான மாடல் 787 - 8 ட்ரீம்லைனர் விபத்தில் சிக்கியது எப்படி?

ஆமதாபாத் விமான விபத்தில் சிக்கிய ட்ரீம் லைனர் விமானம் குறித்து...

News image

ஏர் இந்தியாவின் 787 - 8 ட்ரீம்லைனர்

Updated On :12 ஜூன் 2025, 6:10 pm IST

குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட 787 - 8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமானத் தயாரிப்பில் பிரபலமான போயிங் நிறுவனம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதுப்புது ரக விமானங்களை வல்லுநர்களின் ஆலோசனையுடன் உருவாக்கி வருகிறது. அதில், மிக வெற்றிகரமான விமான மாடல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது போயிங் 787 - 8 ட்ரீம்லைனர் விமானம்.

உலகளவில் பல முன்னணி விமான சேவை நிறுவனங்கள் தொலைதூர பயணங்களுக்கு இந்த வகை விமானத்தையே அதிகம் பயன்படுத்துகின்றன. உலகில் 500-க்கும் மேற்பட்ட ட்ரிம்லைனர் விமானங்கள் சேவையில் உள்ளன.

மேம்பட்ட எரிபொருள் திறன், தொழில்நுட்ப அமைப்புகள், காற்று மாசுபடுதலைக் குறைப்பதற்கான சுற்றுச்சூழல் கவனம் என 787 - 8 ட்ரீம்லைனர் பல விஷயங்களிலும் நற்பெயர் கொண்ட விமான ரகமாகவே பார்க்கப்படுகிறது.

முக்கியமாக, 6,000 அடி உயரத்தில் பறக்கும்போது, அழுத்தத்தால் உடல்நல பாதிப்புகள் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Story image

மேலும், மேம்பட்ட விமானவியல் அமைப்புகள் மற்றும் மின்னணு விமானக் கருவிகள் இருப்பதால் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக தகவலைப் பரிமாறி ஆபத்திலிருந்து தப்பிக்கும் நடவடிக்கைகளிலும் துரிதமாகச் செயல்படும். ஒரே நேரத்தில் 242 பேர் வரை பயணிக்கக் கூடிய இந்த விமானம், 13,620 கிலோ மீட்டர் வரை பயண தூர வரம்பு கொண்டது.

2011 ஆம் ஆண்டு விமான சேவையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 787 - 8 ட்ரீம்லைனர் விமானம் அதன் எரிபொருள் திறன், பயணிகளின் வசதி, புதுமையான வடிவமைப்பு ஆகியவற்றிற்காக புகழ் பெற்றிருக்கிறது.

துரதிர்ஷ்ட வசமாக, அறிமுகமான இந்த 14 ஆண்டுகளில் முதல்முறையாக ஆமதாபாத்தில் வெறும் 625 அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கும்போது கட்டுபாட்டை இழந்து மிக மோசமாகத் தரையில் விழுந்து வெடித்துச் சிதறியிருக்கிறது ட்ரீம்லைனர்.

ஆமதாபாத்தில் விபத்திற்குள்ளான போயிங் 787 - 8 ட்ரீம்லைனர்

ஆமதாபாத்தில் விபத்திற்குள்ளான போயிங் 787 - 8 ட்ரீம்லைனர்

கடந்த காலங்களில் போயிங் விமானங்கள் விபத்துகளில் சிக்கியிருந்தாலும் அதன் அட்டகாசமான உருவாக்கம் என வல்லுநர்களால் பாராட்டப்பட்ட போயிங் 787 - 8 ட்ரீம்லைனர் விபத்தில் சிக்கியது அதை வடிவமைத்தவர்களிடம் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வளவு துல்லியமான அம்சங்கள் இருந்தும் எப்படி இந்த விபத்து நடந்தது? விசாரணையில் விபத்திற்கான காரணம் தெரியும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.