நடிகை சஞ்சிதா உகலே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹிந்தியில் தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் கவனிக்கப்பட்டவர் நடிகை சஞ்சிதா உகலே (22). தொடர்ந்து, திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தவர், பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற சாவா (chchava) படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், மும்பையில் சகோதரியுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சஞ்சிதா உகலே ஜூன் 14 அன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து, சஞ்சிதாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நண்பர்கள், உறவினர்களிடம் இந்தத் தற்கொலை குறித்து காவல்துறை விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
மேலும், சஞ்சிதாவின் சகோதரர் பேசும்போது, “நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 14 அன்று தற்கொலை செய்துகொண்டார். என் தங்கையும் அதே நாளில் தற்கொலை செய்துவிட்டாள். மன அழுத்தம் காரணமாகவே இது நடந்திருக்கும்.” எனக் கூறியுள்ளார்.
பணி ரீதியான மன அழுத்தமா இல்லை வேறு ஏதேனும் காரணங்களா என்கிற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
The incident of actress Sanchita Ugale committing suicide has caused shock.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










