
மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 7,507 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியில் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 6,896 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து சனிக்கிழமை காலை வினாடிக்கு 7,507 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரில் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.84 அடியிலிருந்து 114.91 அடியாக உயர்ந்துள்ளது.
நீர் இருப்பு 85.58 டிஎம்சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.