மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தீவிரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேர் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

ஜம்முவில் தீவிரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :13 மார்ச் 2025, 7:34 am

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பண்டிபோரா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் பண்டிபோரா மாவட்டத்தின் கந்த்பால் - ஹஜின் சாலையில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அப்போது, தீவிரவாதிகளின் கூட்டாளிகளான 2 பேர் அடையாளம் காணப்பட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து ஒரு துப்பாக்கி, ஒரு ஏகே-47 ரக துப்பாக்கி, 2 கையெறி வெடி குண்டுகள் மற்றும் துப்பாக்கி குண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.