ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

பாகிஸ்தானில் கையெறி குண்டு தாக்குதல்! 3 பேர் பலி!

பாகிஸ்தானில் கையெறி குண்டு தாக்குதலில் 3 பேர் பலியானதைப் பற்றி...

News image
கோப்புப் படம்
Updated On :22 மார்ச் 2025, 11:46 am

DIN

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடைபெற்ற கையெறி குண்டு தாக்குதலில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

கைபர் பக்துன்குவா மாகாணத்தின் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள குர்ராம் மாவட்டத்தில் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டில் அங்குள்ளவர்களுக்கு இடையே இன்று (மார்ச் 22) வாக்குவாதம் எழுந்து மோதல் வெடித்துள்ளது. அப்போது, அதில் ஒருவர் தான் வைத்திருந்த கையெறி குண்டை அங்கிருந்தவர்கள் மீது வீசியுள்ளார்.

இந்நிலையில், அந்த குண்டு வெடித்ததில் 3 பேர் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். மேலும், அதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பலியானவர்களின் உடல்களைக் கைப்பற்றிய அந்நாட்டு அதிகாரிகள் படுகாயமடைந்தவரை மீட்டு குர்ராம் மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும், இந்த தாக்குதலை நடத்தியவர் பற்றிய முழுமையான தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.