மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களில் மலர் மாலைகள் சாற்றும் பணி!விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம்! சீனு ராமசாமிஇடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை! யாருக்கு ஆதரவு? அன்புமணி பேட்டிராஜிநாமா செய்தவர்களே இடைத்தேர்தலில் போட்டியிடுவது கேலிக்கூத்து! உயர் நீதிமன்றம் அதிருப்தி!ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!

பாகிஸ்தான்: 24 மணிநேரத்தில் 52 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் 52 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது குறித்து...

கோப்புப் படம் - ஏபி

Published On :

பாகிஸ்தானின் 3 மாகாணங்களில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்களில் 52 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளால் பஞ்சாப் மாகாணத்தில் 6 பயங்கரவாதிகளும், பலூசிஸ்தானில் 41 பயங்கரவாதிகளும் மற்றும் கைபர் பக்துன்குவாவில் தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பைச் சேர்ந்த தளபதி உள்பட 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் பாதுகாப்புப் படைகளின் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக, பஞ்சாப் மாகாண காவல் துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கூறியுள்ளனர்.

பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தியதாகவும், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து மிகப் பெரியளவிலான ஆயுதங்கள் மற்றும் அவர்கள் கொள்ளையடித்த பணம் ஆகியவைக் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல்களில், 3 உள்ளூர்வாசிகள் கொல்லப்பட்டதுடன் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த நடவடிக்கையில், 25 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளைப் பிடிக்க பாகிஸ்தான் ராணுவம் ஹெலிகாப்டர்கள் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக அறிவித்துள்ளனர்.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு தலிபான்கள் தலைமையிலான ஆட்சி அமைந்தது முதல் பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.

Summary

In Pakistan's three provinces, 52 terrorists were killed in attacks by security forces in the last 24 hours alone.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.