சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஜெர்மனி, ஆஸ்திரியா அமைச்சர்களின் சிரியா பயணம் ரத்து!

ஜெர்மனி, ஆஸ்திரியா அமைச்சர்களின் சிரியா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2025, 1:36 pm IST

ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் உள்துறை அமைச்சர்களின் சிரியா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் நான்சி ஃபேஸர் மற்றும் ஆஸ்திரியா நாட்டின் உள்துறை அமைச்சரான கெர்ஹார்டு கார்னர் ஆகியோர் ஜெர்மன் ராணுவ விமானத்தில் ஜோர்டானிலிருந்து சிரியாவிற்கு இன்று (மார்ச் 27) காலை பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்த விமானம் ஜோர்டான் தலைநகர் அம்மானிலிருந்து புறப்படும் முன்னர் பாதுகாப்பு காரணங்களினால் அவர்களது பயணமானது ரத்து செய்யப்பட்டதாக ஜெர்மனி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சிரியாவில் தீவிரவாத தாக்குதல் நடைபெறக்கூடும் என ஜெர்மன் பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையான எச்சரித்ததைத் தொடர்ந்து இந்தப் பயணமானது ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதை நிராகரிக்க முடியாது எனவும் இத்தகைய அச்சுறுத்தலுடன் அவர்களது பயணத்தை தொடர்வது பொறுப்பான முடிவாக இருக்காது என ஜெர்மன் வெளியுறவுத் துறை குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பயணமானது முன்கூட்டியே அறிவிக்கப்படாத நிலையில், இரு நாடுகளின் அமைச்சர்களும் சிரியாவின் இடைக்கால அரசின் அமைச்சர்கள் மற்றும் ஐ.நா. நிவாரண அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தனர்.

முன்னதாக, கடந்த 14 ஆண்டுகளாக சிரியாவில் நடைபெற்று வந்த உள்நாட்டு போரினால் அந்நாட்டு மக்கள் பெரும்பாலானோர் ஜெர்மனியில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், சுமார் 13 ஆண்டுகள் கழித்து கடந்த வாரம் சிரியாவில் ஜெர்மனியின் தூதரகத்தை ஜெர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சர் அன்னாலேனா பேர்போக் மீண்டும் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.