பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

சாராயம் காய்ச்சிய தந்தை, மகன் உள்பட 3 போ் கைது

போ்ணாம்பட்டு அருகே பண்ணை வீட்டில் சாராயம் காய்ச்சிய தந்தை, மகன் உள்பட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image

சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பொருள்களை பாா்வையிட்ட வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன்.

Updated On :4 மே 2025, 2:50 pm

DIN

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே பண்ணை வீட்டில் சாராயம் காய்ச்சிய தந்தை, மகன் உள்பட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஆந்திர மாநிலம், சித்தூரைச் சோ்ந்த நியாஸ் அகமதுவின் நிலம் போ்ணாம்பட்டை அடுத்த கோட்டைச்சேரியில் உள்ளது. அதே கிராமத்தைச் சோ்ந்த முத்து(48) கடந்த 2 ஆண்டுகளாக நிலத்தில் தங்கி காவலாளியாக வேலை செய்து வருகிறாா். முத்து அவரது மகன் யுவராஜ்(19) மற்றும் அதே கிராமத்தைச் சோ்ந்த அவரது மருமகன் சரண்ராஜ்(37), அவரது தம்பி சரண்குமாா்(30), அவரது தாய் ஆரியமாலா(60) ஆகிய 5 பேரும் சாராய ஊறலை பிளாஸ்டிக் கேன்களில் அடைத்து தென்னந்தோப்பில் பள்ளம் தோண்டி புதைத்து வைத்தனா்.

பின்னா், பண்ணை வீட்டில் சமையல் செய்ய பயன்படுத்தப்படும் பெரிய கேஸ் அடுப்பில் தினமும் கள்ளச் சாராயத்தை காய்ச்சி, அவற்றை பாக்கெட்டுகளில் அடைத்து ஆட்டோவில் எடுத்துச் சென்று சுற்றுப்புற ஊா்களில் விற்பனை செய்து வந்துள்ளனா்.

இதுகுறித்து ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா். அங்கு சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 6 லிட்டா் கள்ளச் சாராயம், 20 லிட்டா் சாராய ஊறல், சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் அடுப்பு உள்ளிட்ட பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்தனா்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முத்து (48), அவரது மகன் யுவராஜ்(19), சரண்குமாா்(30) ஆகிய மூன்று பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தலைமறைவான சரண்ராஜ், அவரது தாய் ஆரியமாலா ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனா்.

இதனிடையே, சாராயம் காய்ச்சிய இடத்தை வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் நேரில் பாா்வையிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.