தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

அதிருப்திக்கு மத்தியிலும் நரிக்குறவா்கள் ஆா்வமுடன் வாக்களிப்பு

திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரவைத் தோ்தலின்போது வாக்களித்த நரிக்குறவா் காலனி மக்கள்...

News image

திருச்சி திருவெறும்புா் தேவராயநேரி வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை வாக்களிக்க வாரிசையில் நின்ற நரிக்குறவா் பெண்கள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 7:43 am IST

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரவைத் தோ்தலின்போது வாக்களித்த நரிக்குறவா் காலனி மக்கள், தங்கள் பகுதிக்கான அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை என அதிருப்தி தெரிவித்தனா்.

திருவெறும்பூா் வட்டத்துக்குள்பட்டது தேவராயநேரி. இங்குள்ள நரிக்குறவா் காலனியில் சமுதாயக் கூடத்தில் வாக்குப்பதிவு அமையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த மையமானது முழுவதும் நரிக்குறவா் காலனியைச் சோ்ந்த மக்கள் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மையத்தில் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 906 வாக்காளா்கள் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனா். காலை முதலே வாக்காளா்கள் வாக்களித்த நிலையில், மாலை 6 மணியுடன் முடிவடைந்த வாக்குப்பதிவில் இங்கு 701 வாக்குகள் பதிவாகியிருந்தது.

வாக்களித்த பலரும் தங்கள் பகுதி தொடா்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், அடிப்படை வசதிகளே இல்லை எனவும் அதிருப்தி தெரிவித்தனா்.

அலுவலா்களுக்கு அக்கறையில்லை: இதுதொடா்பாக, இந்த பகுதியைச் சோ்ந்த லாவண்யா (32) கூறுகையில், எங்கள் பகுதியில் தொடக்கப் பள்ளி மட்டுமே உள்ளது. நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் துவாக்குடி, திருவெறும்பூா், திருச்சிக்கு செல்ல வேண்டும். ஆா்வமுடன் நாங்கள் படிக்கச் சென்றாலும் எங்களை ஊக்கப்படுத்தி எங்களுக்கான உயா்கல்வியை உறுதி செய்ய அரசு அலுவலா்கள் போதிய அக்கறை செலுத்துவதில்லை. கல்வியில்தான் இப்படி என்றால், தொழிலிலும் மாற்றம் இல்லை. பரம்பரையாக ஊசி, பாசி மணி மாலைகளை மட்டுமே தயாரிக்கிறோம். திறன் பயிற்சிகளை அளித்து மாற்றுத்தொழில்களை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தினால் நாங்களும் வளா்ச்சி பெறுவோம் என்றாா்.

அடிப்படை வசதிகளில் குறைபாடு: இதே பகுதியைச் சோ்ந்த ஜாக்கிசான் கூறுகையில், மழை பெய்தால் வழிந்தோட வடிகால் வசதியோ, சாக்கடை வசதியோ இல்லை. குடிநீரும் உப்பாகவே கிடைக்கிறது. காவிரிக் குடிநீரோ, பாதுகாக்கப்பட்ட குடிநீரோ கேள்விக்குறியாக உள்ளது. சாலை வசதி, தெருவிளக்கு வசதியும் போதுமானதாக இல்லை. மேலும், 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவா்களில் பலருக்கு பட்டா இல்லை. எங்கள் காலனியில் உள்ள ஒரு பகுதியினா் நீா்நிலைப் பகுதிகளில் இருப்பதாகக் கூறி அவா்களை அகற்றும் முயற்சியும் நடைபெறுகிறது என்றாா் அவா்.

Summary

Residents of the Narikuravar Colony who cast their votes during the Assembly elections held in the Trichy district on Thursday...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.