கரூர்: கரூர் அருகே மூதாட்டி ஒருவர் நகைக்காக அவரது கை, கால்களை கட்டி கொலை செய்துவிட்டு நகையை பறித்துச் சென்ற கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் அடுத்த உப்பிடமங்கலம் அருகே உள்ள சாலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தாயார் அம்மாள் (79). வீட்டில் தனியாக வசித்து வந்தார். திங்கள்கிழமை காலை நீண்ட நேரமாக வீட்டிலிருந்து தாயார் அம்மாள் வெளியே வராததை கண்டு அவரது சகோதரி மகள் மனோரஞ்சிதம் சென்று பாா்த்தபோது அவா் கை, கால் கட்டிய நிலையில் வாயில் துணியை வைத்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். மேலும் அவர் காது, மூக்கில் அணிந்திருந்த தோடு, மூக்குத்தியையும் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
சம்பவம் தொடர்பாக மனோரஞ்சிதம் வெள்ளியணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிஹரன் பிரசாத் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் வீட்டிற்குள் சென்று ஆய்வு செய்தனர். தடவியல் நிபுணா்களும் கொலையாளிகளின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
மூதாட்டியின் உடலை உடல்கூறாய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக வெள்ளியணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
Summary
Elderly Woman Murdered and Robbed of Jewelry Near Karur. Police Investigation Underway
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லையில் பெண் வெட்டிக்கொலை!

சின்ன சந்தேகம்தான்! தாய், அண்ணன் கொலையில் தம்பி கைதானதன் பின்னணி

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

குழந்தையின்மைக்கு சூனியம் வைத்ததாக சந்தேகம்! ஜார்க்கண்டில் பெண் அடித்துக் கொலை!
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை


