மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கரூர் அருகே மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை: போலீசார் விசாரணை

கரூர் அருகே மூதாட்டி ஒருவர் நகைக்காக அவரது கை, கால்களை கட்டி கொலை செய்துவிட்டு நகையை பறித்துச் சென்றது குறித்து...

News image

கரூர் அருகே மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை - கோப்புப்படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 6:09 am

கரூர்: கரூர் அருகே மூதாட்டி ஒருவர் நகைக்காக அவரது கை, கால்களை கட்டி கொலை செய்துவிட்டு நகையை பறித்துச் சென்ற கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

கரூர் அடுத்த உப்பிடமங்கலம் அருகே உள்ள சாலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தாயார் அம்மாள் (79). வீட்டில் தனியாக வசித்து வந்தார். திங்கள்கிழமை காலை நீண்ட நேரமாக வீட்டிலிருந்து தாயார் அம்மாள் வெளியே வராததை கண்டு அவரது சகோதரி மகள் மனோரஞ்சிதம் சென்று பாா்த்தபோது அவா் கை, கால் கட்டிய நிலையில் வாயில் துணியை வைத்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். மேலும் அவர் காது, மூக்கில் அணிந்திருந்த தோடு, மூக்குத்தியையும் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

சம்பவம் தொடர்பாக மனோரஞ்சிதம் வெள்ளியணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிஹரன் பிரசாத் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் வீட்டிற்குள் சென்று ஆய்வு செய்தனர். தடவியல் நிபுணா்களும் கொலையாளிகளின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

மூதாட்டியின் உடலை உடல்கூறாய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக வெள்ளியணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Summary

Elderly Woman Murdered and Robbed of Jewelry Near Karur. Police Investigation Underway

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.