கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

திருப்பதி: 2025-ல் 13.52 கோடி லட்டு பிரசாதங்கள் விற்று சாதனை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2025 ஆம் ஆண்டில் 13.52 கோடி லட்டு பிரசாதங்கள் விற்பனை தொடர்பாக...

News image
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2025 ஆம் ஆண்டில் 13.52 கோடி லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டு சாதனை.
Updated On :2 ஜனவரி 2026, 7:45 am

இணையதளச் செய்திப் பிரிவு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2025 ஆம் ஆண்டில் 13.52 கோடி லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது திருப்பதி தேவஸ்தானம். இது 2024-ஆம் ஆண்டை விட 10 சதவீதம் அதிகரிப்பு எனவும், லட்டுகளில் மேம்படுத்தப்பட்ட சுவை மற்றும் தரத்தால் பக்தர்கள் மகிழ்ச்சி மற்றும் திருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 27 ஆம் தேதி மட்டும் 5.13 லட்சம் லட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

இதுதொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றது.

திருப்பதி தேவஸ்தானத்தால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1940 ஆம் ஆண்டு முதல் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 2025-ஆம் ஆண்டில், ஸ்ரீவாரி லட்டு பிரசாதத்தின் விற்பனையில் பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்குச் சாதனை படைத்துள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டில் பக்தர்களுக்கு 12.15 கோடி லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், 2025-ஆம் ஆண்டில் 13.52 கோடி லட்டுகள் பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட பக்தர்களுக்கு கூடுதலாக 1.37 கோடி லட்டுகள் பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதுடன் 2024-ஆம் ஆண்டை விட 10 சதவீதம் அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

மேலும், கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி மட்டும் ஒரே நாளில் பக்தர்களுக்கு அதிகபட்சமாக 5.13 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 4 லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதேபோன்று பக்தர்கள் வருகையும் 2.55 கோடியில் இருந்து 2.70 கோடியாக அதிகரித்துள்ளது.

திருமலை தேவஸ்தானம் நாள்தோறும் சுமார் 4 லட்சம் லட்டுகளைத் தயாரித்து பக்தர்களுக்கு வழங்குகிறது. பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ரதசப்தமி போன்ற முக்கிய திருவிழா நாட்களில் 8 முதல் 10 லட்சம் லட்டுகள் தயாரித்து இருப்பு வைக்கப்படுகின்றன. பிற நாள்களில் கூடுதலாக 3.50 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்படுகின்றன.

ஸ்ரீவாரி மடப்பள்ளியில், சுமார் 700 ஸ்ரீ வைணவ பிராமணர்கள் இரண்டு ஷிஃப்டுகளில், இரவு பகலாக, மத ஒழுக்கம் மற்றும் பாரம்பரியத்தை பின்பற்றி லட்டு பிரசாதத்தைத் தயாரித்து வருகின்றனர்.

சமீப காலங்களாக லட்டு பிரசாதத்தில் மேம்படுத்தப்பட்ட சுவை மற்றும் தரம் அதிகரித்துள்ளதாக பக்தர்கள் மகிழ்ச்சி மற்றும் திருப்தி தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த பத்தாண்டுகளில் 2025 -ல் பக்தர்களுக்கான லட்டு பிரசாதம் விற்பனையில் ஒரு மைல்கல் சாதனை படைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

summary

In 2025, the sale of Srivari Laddu prasadam reached a record high creating an All Time Highest Sale in a decade. Compared to 2024, laddu sales increased by 10 percent.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.