"ஆனால் சிபிஐ அதிகாரிகளுக்கு அவர்களது வாக்குமூலத்தை விட மேலான நேரடி ஆதாரம் தேவைப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் அனில்குமாரை, அங்கேயே, தங்கள் கண் முன்பே, செல்போனை ஸ்பீக்கரில் போட்டு பண்டாரியை அழைத்து லஞ்சம் பெறப்பட்டுள்ளது தொடர்பாக தெரிவிக்குமாறு சொன்னார்கள், "அனில்குமார் செல்போன் அழைப்பை எடுத்த பண்டாரியிடம், முதல்கட்டமாக ரூ.70 லட்சத்தை கொடுத்துள்ளனர் என்று அனில்குமால் கூறியதும், பிரபா பண்டாரி, மிகவும் நல்லது, அந்த பணத்தை தங்கமாக மாற்றித் தன்னிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்த செல்போன் உரையாடல் முழுவதையும் பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், இந்த உரையாடலை லஞ்சப் பரிவர்த்தனைக்கான முக்கிய ஆதாரமாக மாற்றினர். இந்த உரையாடல் மூலம் லஞ்ச கும்பலின் தலைவி பிரபா பண்டாரி என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்த சிபிஐ அதிகாரிகள், உரையாடலின் போது, பிரபா பண்டாரி தில்லியில் இருப்பதை உறுதி செய்து கொண்டனர்.