கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!
கேரள மாநிலத்தில் அரசு வேலை வாய்ப்புகளில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு வழங்கப்படுவது குறித்து....


அரசு வேலைவாய்ப்புகளில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு வழங்க கேரள அரசு முடிவெடுத்துள்ளது.
கேரளத்தில் தற்போது உள்ள இடஒதுக்கீட்டு முறையில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு வழங்குமாறு திட்ட அறிக்கை ஒன்றை மாநில அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அம்மாநில சமூக நீதித்துறை சமர்ப்பித்துள்ளது.
கேரள உயர் நீதிமன்றம், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் திருநங்கைகளுக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்துமாறு அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. முன்னதாக, கடந்த 2014 ஆம் ஆண்டு இதே போன்ற உத்தரவை உச்ச நீதிமன்றமும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குப் பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவின்படி, மாநில அரசுப் பணியாளர் தேர்வில் தகுதி பெற்ற மூன்று திருநங்கைகளை அந்தந்தப் பிரிவுகளின் கீழ் நியமிக்கக் கூடுதல் பதவிகளை உருவாக்கியிருந்தது. இதைத்தொடர்ந்து, முறையான இடஒதுக்கீட்டுக் கட்டமைப்பு செயல்படுத்தப்படும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என்று அம்மாநில அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், முறையான இடஒதுக்கீட்டுக்கான திட்ட அறிக்கை மாநில அமைச்சரவையின் கீழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என கேரள சமூக நீதித்துறை அமைச்சர் ஆர். பிந்து தெரிவித்துள்ளார்.
சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மூன்றாம் பாலினத்தவரின் முன்னேற்றத்துக்கு இது போன்ற திட்டங்கள் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...