திருவள்ளூர் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் அனைத்து வகை பள்ளிகளில் 92.75 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாநில அளவில் 28 ஆவது இடம் பெற்றுள்ளது
தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20) காலை வெளியாகின. இந்தத் தேர்வில் 94.31 % மாணவ, மாணவிவகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் இந்தாண்டும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகள் 31231 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் மாணவர்கள்-14047, மாணவிகள்-14920 என மொத்தம் 28967 பேர் தேர்ச்சி பெற்றனர்.
மாநில அளவிலான தேர்ச்சி தர வரிசைப் பட்டியலில் திருவள்ளூர் மாவட்டம் 92.75 சதவீதம் பெற்று 28 ஆவது இடம் பெற்றுள்ளது.
Summary
Regarding the 92.75% pass rate achieved by students in the 10th public examinations in the Thiruvallur district...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








