தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

சிதம்பரத்தில் ஸ்ரீகுருநமச்சிவாயர் குருபூஜை விழா!

சிதம்பரம் ஸ்ரீஆத்மநாதர் கோயிலில் ஸ்ரீகுருநமச்சிவாயர் குருபூஜையும், ஸ்ரீமாணிக்கவாசகர் மாத குருபூஜை விழா குறித்து...

Sri Guru Namachivayar Guru Pooja Festival

சிதம்பரம் ஸ்ரீஆத்மநாதர் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீகுருநமச்சிவாயர் குருபூஜை விழாவில் பங்கேற்ற திரளான சிவனடியார்கள். - டிஎன்எஸ்

Published On :23 மே 2026, 11:40 am IST

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீஆத்மநாதர் கோயிலில் ஸ்ரீகுருநமச்சிவாயர் குருபூஜையும், ஸ்ரீமாணிக்கவாசகர் மாத குருபூஜை விழாவும் சனிக்கிழமை நடைபெற்றது. திரளான திரளான சிவனடியார்கள் பங்கேற்று திருவாசகம் முற்றோதல் செய்து வழிபட்டனர்.

வேங்கான் தெருவில் திருபாற்கடல் மடத்தில் அமைந்துள்ள ஆத்மநாதர் கோயிலை மாணிக்கவாசகர் கட்டி அங்கேயே தங்கியிருந்து வழிபட்டு வந்துள்ளார். அவருக்கு முன்பு பர்ணசாலை அமைத்து பதஞ்சலி, வியாக்கிரபாதர், குருநமச்சிவாயர் போன்ற முனிவர்கள் தங்கியிருந்து தவம் செய்த இடமாகும். குருநமச்சிவாயரின் பசியை போக்க அம்பிகை உணவு தந்து அருளிய இடம்.

குருநமச்சிவாயர் தவமிருந்து சமாதியான இடத்தில் அவருக்கு தனிக் கோயில் கட்டப்பட்டுள்ளது. அதுபோன்று இங்குள்ள ஆத்மநாதர் கோயிலில் தங்கியிருந்த சமயக் குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் திருவாசகத்தை சொல்ல அந்தணர் வடிவில் வந்த நடராஜப் பெருமான் எழுதி, இறுதியில் திருச்சிற்றம்பலமுடையான் என கையொப்பிட்டதாக வரலாறு கூறுகிறது.

அந்தச் சிறப்பு வாய்ந்த குருநமச்சிவாயர் கோயிலில் சனிக்கிழமை காலை சிவனடியார்கள் பங்கேற்ற சிவபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக, சிவபூஜை வழிபாடு, சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.

விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீகுருநமச்சிவாயர், ஸ்ரீமாணிக்கவாசகர் மற்றும் ஸ்ரீயோகாம்பாள் சமேத ஸ்ரீஆத்மநாதர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மகா தீபாராதனைகள் நடைபெற்றன.

குருபூஜை விழாவில் இந்து ஆலய பாதுகாப்புக் குழுத் தலைவர் மு.செங்குட்டுவன், ஈஸ்வரலிங்கம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிச்சித்தனர். பின்னர் மகேஸ்வர பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா வை.பசவராஜ் மற்றும் சிவத் தொண்டர்கள் செய்திருந்தனர்.

Summary

Sri Guru Namachivayar Guru Pooja Festival in Chidambaram

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.