விண்ணோடும் முகிலோடும் விளையாடிய சங்கநாதத்துக்கு இன்று நூற்றாண்டு விழா!

சிதம்பரம் ஜெயராமனின் காலத்துக்கும் அழியாத 10 சிறந்த திரையிசைப் பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்...
விண்ணோடும் முகிலோடும் விளையாடிய சங்கநாதத்துக்கு இன்று நூற்றாண்டு விழா!
Published on
Updated on
1 min read

 ‘வண்ணத்தமிழ்ப் பெண்ணொருத்தி என்னருகில் வந்தாள்...’

 ‘காவியமா... நெஞ்சின் ஓவியமா...’

‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே...’

‘குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது...’

நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்’

- போன்ற காலத்துக்கும் நிலைத்து நிற்கும் திரைப்படப் பாடல்களைப் பாடியவரும் காலஞ்சென்ற இசைக் கலைஞருமான சிதம்பரம் எஸ்.ஜெயராமனின் நூற்றாண்டு விழா இன்று மாலை 6.30 மணியளவில் சென்னை, மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபாவில் நடைபெறுகிறது. 1993 ஆம் மறைந்தவரான சி.எஸ் ஜெயராமன் கலைஞர் கருணாநிதியின் மைத்துனர் ஆவார். இவரது மூத்த சகோதரி பத்மாவதியே கலைஞரரின் முதல் மனைவி. மு.க முத்துவின் அம்மா. அவரது சகோதரி மகனான மு.க. முத்துவே பின்னாட்களில் சி.எஸ்.ஜெயராமனின் மகளான சிவகாம சுந்தரியைமணந்து கொண்டார். இவரது நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் அந்நிகழ்வில் பிரபல இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.
 

சிதம்பரம் ஜெயராமனின் காலத்துக்கும் அழியாத 10 சிறந்த திரையிசைப் பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்...

தமிழ்த்திரையிசைப் பாடல்களில் சி.எஸ்.ஜெயராமனின் பங்களிப்பு இசைத்துறையில் மூன்று தலைமுறைகள் தாண்டியும் காலத்தால் அழியாப் பெருமை கொண்டது. இன்றும் அவரது பாடல்களை முணுமுணுக்காதவர் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com