பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

கோலம் போடுவது வேலையல்ல; அது ஒரு கலை! விதவிதமான கோலங்களுக்கு டிப்ஸ்!

கோலம் போடுவது ஒரு வேலையல்ல, அது ஒரு கலை, விதவிதமான கோலங்கள் போட டிப்ஸ்

News image

கோலம் போடலாம் - DPS

Updated On :25 மார்ச் 2026, 9:32 am IST

காலையில் எழுந்ததும் பெண்கள் முதல் வேலையாக வீட்டில் தலைவாசலைப் பெருக்கி, தண்ணீர் தெளித்து கோலம் போடுவார்கள். கோலம் என்றால் சின்னதாக ஒரு கோலம் அவ்வளவுதான்.

ஆனால், ஒவ்வொரு நாளும் வீட்டின் வாசலில் போடப்படும் கோலங்கள் ஒன்றுபோலவே இல்லாமல் விதவிதமாக இருக்கலாம். ஏனென்றால் அது வேலையல்ல, ஒரு கலை.

புள்ளியில்லாமல் கோலம் போடும்போது முதலில் ஒரு புள்ளியை மையமாக வைத்து அதைச் சுற்றி கோலத்தை விரிவாக்க வேண்டும்.

இப்போதெல்லாம் இணையதளங்களில் கோலங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை ஸ்க்ரீன் ஷாட் வைத்துக் கொண்டு நாள்தோறும் புதிதுபுதிதாகக் கோலம் போடலாம்.

ஒரு வாரத்துக்கு கோடுகள் போட்ட கோலம், ஒரு வாரத்துக்கு புள்ளி வைத்த கோலம், பூக்கோலம், கலர் கோலம் என்று நாள்தோறும் நம்மை உற்சாகத்தோடு வைத்துக் கொள்ள கோலம் உதவும்.

அபார்ட்மெண்டில் வசிப்பவர்கள் தங்களது வீட்டின் முன் செம்மண்ணால் மெழுகுவிட்டு அல்லது சிமென்ட் தரை என்றால் ஏதேனும் ஒரு அடர்த்தியான பெயிண்ட் அடித்துவிட்டு அதன் மேல் கோலமிட்டால் பளிச்சென்று தெரியும்.

கோலப்பொடி வாங்கி சலித்தவுடன் கால்படி மாவுக்கு நூறு கிராம் பச்சரிசி மாவு கலந்து கோலம் போடலாம்.

அரிசி மாவு கலந்த சலித்து கோலப்பொடியை கோலக்குழாயில் திணித்து போடும்போது குழாயின் துளைகள் அடைபடாது.

பண்டிகை நாள்களில் தலைவாசல் படியை நீர் விட்டு கழுவி கோலம் போட வேண்டும். கட்டாயம் செம்மண் கரை கட்ட வேண்டும்.

வாசல் மண் தரையானால் நன்கு பெருக்கி விட்டு தண்ணீர் தெளித்து கோலம் போட்டு செம்மண் அல்லது காவி கரையிட வேண்டும். அம்பாள், நாள்தோறும் வாசலில் கோலம் போடும் வீட்டுக்கு மனம் மகிழ்ந்து வருவாள், மகாலட்சுமி வந்து அருள் தருவாள் என்பது ஐதீகம்.

கோலப்பொடி வாங்கும்போது வெளுப்பு அதிகம் உள்ள பொடியை வாங்க வேண்டும் அல்லது வெளுப்பு குறைவாக இருந்தால் நிச்சயம் பச்சரிசி மாவை கலக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.