சிலந்திகள் கூடு கட்டி அதனால் ஏற்படும் ஒட்டடை மற்றும் காற்றில் வரும் தூசுகள் சேர்ந்து உருவாகும் நூலாம்படை போன்றவை வீட்டின் அழகைக் கெடுக்கும் முக்கிய காரணிகள்.
பொதுவாக சில குறிப்பிட்ட இடங்களில்தான் இந்த ஒட்டடை சேரும். அந்த இடங்களை முற்றிலும் மாற்றிவிட முடியும்.
வீட்டில் நூலாம்படை சேரும் இடங்களில் வினிகருடன் சம அளவு தண்ணீர் சேர்த்து ஸ்ப்ரே செய்தால், நூலாம்படை சேராது. சிலந்திகளுக்கும் இது அலர்ஜி.
மற்றொரு யோசனை என்னவென்றால், வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதனை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் துணியை நனைத்து, ஒட்டடை சேரும் இடங்களில் துடைத்துவிடுங்கள்.
சிலந்திகள் இந்த வாசனைக்கு வரவே வராது.
புதினா எண்ணெய் என்று கடைகளில் விற்கப்படுகிறது. அவற்றை வாங்கி ஜன்னல் ஓரங்கள், ஒட்டடை சேரும் இடங்களில் ஸ்பிரே செய்து விடலாம்.
வீட்டை பெறுக்கும்போதே கதவின் இடுக்குகளையும் ஒரு முறை துடைப்பத்தால் துடைத்துவிட்டால் அங்கு ஒட்டடை சேருவதைத் தடுக்கலாம்.
கூடுதலாக ஒரு தகவல் என்னவென்றால், சிலந்திகள் வலைப் பின்னி அதன் மூலம் சிறு உயிரினங்களைப் பிடித்து சாப்பிட்டு நம் வீட்டை பாதுகாக்கிறது. எனவே, வீட்டுக்கு வெளியே இருக்கும் சிலந்தி வலைகளை அவசரப்பட்டு அப்புறப்படுத்திவிட வேண்டாம்.
வீட்டுக்குள் வேண்டுமானால் ஒட்டை சேராமல் பார்த்துக் கொள்ளலாம்.
Summary
Here are some simple ways to avoid getting mold in your home.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் ரூ. 282 கோடி லாபம்!

விபத்துகள் சாலைகளில் மட்டுமல்ல.. வீடுகளிலும் நடக்கலாம்! தடுக்கும் வழிகள்
திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்!

தொழில்நுட்பம் இருக்க பயமேன்? வீட்டின் பாதுகாப்புக்கு சிறந்த யோசனைகள்!
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை



