நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

உங்கள் முகம் தெய்விக அழகுடன் தேஜஸாக வேண்டுமா? இதோ டிப்ஸ்

ஆப்பிளின் சதைப்பகுதியை மசித்து, தயிருடன் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து

News image
Updated On :10 ஆகஸ்ட் 2018, 5:49 pm IST

ஆப்பிள் உடல் நலத்திற்கு எவ்வளவு நன்மை செய்கிறதோ அதேப்போன்று இதில் உள்ள விட்டமின்கள், மினரல் சத்துக்களும் சருமத்தில் உள்ள சுருக்கங்கள், கருமையைப் போக்கி மினுமினுப்பை அள்ளித் தந்து அழகு சேர்க்கிறது. ஆப்பிளைக் கொண்டு என்னவகையான அழகு செய்யலாம் பார்ப்போம்:
 
ஆப்பிளில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இவை சருமத்தில் ஏற்படும் பாதிப்பை சரி செய்கிறது. வாரம் ஒரு முறை ஆப்பிள் பேக் போட்டால் முகம் இளமையாக இருக்கும்.
 

முகப்பருவைத் தடுக்க

ஆப்பிளின் சதைப்பகுதியை மசித்து, தயிருடன் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கடலைமாவு கொண்டு கழுவி விட வேண்டும். முகப்பருக்கள் உண்டாவதை தடுக்கிறது.
 

 பளிச் தோற்றத்திற்கு

ஆப்பிள், வாழைப்பழம் இரண்டையும் மசித்து ஒன்றாக கலந்து சிறிது தேன் கலந்து முகத்தில் பூசி வர, அற்புதமான ஸ்கின் டோனராக இது வேலை செய்து சருமத்தில் ஜொலிப்பைத் தரும். மிருதுவாகவும், பளிச்சென்ற தோற்றத்தையும் தரும்.
 

Story image

தோல் வறட்சி நீங்க
 ஆப்பிளை மசித்து அதனுடன் சில துளி கிளிசரின் சேர்த்து முகத்தில் தடவி வர . மழைக்காலத்தில் சருமம் வறண்டு போவதை தடுக்கும்.
 

முகத்தில் உள்ள கருமையை அகற்ற

ஆப்பிளில் சாறு எடுத்து, அதனை உடல் முழுவதும் தடவி, காய்ந்ததும் பயத்தம் மாவு தேய்த்துக் குளித்து வர, புற ஊதாக்கதிர்களின் தாக்கத்திலிருந்து காப்பாற்றும். வெய்யிலினால் சருமத்தில் ஏற்படும் கருமையை அகற்றும்.
 

ஜொலிப்பை பெற

திடீரென ஏதாவது விசேஷத்திற்கு அல்லது பார்ட்டிக்கு போகவேண்டுமானால், அந்த சமயங்களில் ஆப்பிள் கை கொடுக்கும். ஆப்பிள்சாறு மற்றும் மாதுளம்பழச்சாறு இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக கலந்து, முகத்தில் தடவி பத்துநிமிடம் வைத்திருந்து காய்ந்தபின் முகத்தை கழுவினால் முகம் ஜொலிக்கும்.
 

கரும்புள்ளிகள் மறைய

முகத்தில் கரும்புள்ளிகள், கருந் திட்டுகள் இருந்தால் அதற்கு ஆப்பிளை மசித்து அதனுடன் சிறிது பால் சேர்த்து கலந்து முகத்தில் பேக்காக போட்டு வர, ஒரு வாரத்திலேயே வித்தியாசம் தெரியும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.