நீங்கள் எப்போது ரெஸ்டாரெண்டுகளுக்குச் சாப்பிடப் போனாலும் தயவு செய்து ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள். அங்கே உணவுப்பொருட்களை அழகு படுத்துவதற்கு என்றே சில வேலைகளைச் செய்து வைத்திருப்பார்கள். ஒன்றுமில்லை ஐஸ்கிரீம் சர்வ் செய்தால் அதன் மேலே செர்ரிப் பழத்தையோ, அல்லது வேஃபர் பிஸ்கட்டையோ சொருகி வைப்பது, ஜூஸ் டம்ளர்களில் கேரட், லெமன், வெள்ளரித்துண்டுகளை சொருகி வைப்பது, போன்ற வேலைகளை அங்கிருக்கும் கேட்டரிங் பணியாளர்கள் செய்து வைப்பார்கள். பார்க்க அழகாகத் தான் இருக்கும். ஆனால், அது சாப்பிட அத்தனை அழகானதில்லை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இப்படி கார்னிஷிங் செய்யப் பயன்படுத்தும் பழங்கள் மற்றும் காய்கறிகள் பெரும்பாலும் கழுவப்படுவதில்லை என்றொரு தகவல். சும்மா, சும்மா கழுவிப் பயன்படுத்தினால் பார்க்க அத்தனை லுக்காக இருக்காது என்பது ஒரு காரணம். அத்துடன் இதையெல்லாமா போய் கழுவிக் கொண்டிருப்பார்கள் வெகு சிலர் தானே இவற்றையும் மிச்சம் வைக்காமல் உண்பார்கள். மொத்தத்தில் பலரும் இவற்றைத் தூக்கி குப்பையில் தானே எறியப் போகிறார்கள் என்ற அலட்சியம் ஒரு காரணம். எனவே நாம் நமது ஆரோக்யத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் இவற்றை உண்ணாமல் புறக்கணித்து விடுவது நல்லது. அப்படி உங்களுக்கு கார்னிஷிங் பழங்களின் மீது கொள்ளைப் ப்ரியம் என்றால் பேசாமல் வீட்டிலேயே பார்ட்டி பண்ணி சாப்பிட்டுக் கொள்ளுங்கள். ரெஸ்டாரெண்டில் ரிஸ்க் எடுக்காதீர்கள்.