பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மாற்றுத்திறனாளி மாணவிக்காக ரூ 14 லட்சம் செலவில் லிஃப்ட் வசதி அமைத்துத் தந்த பள்ளி!

சிபிஎஸ்இ பள்ளிக் கொள்கைகளில் ஒன்று மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்காக லிஃப்ட் அல்லது ராம்ப் வசதி செய்து தரப்பட வேண்டும் என்பது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:33 pm IST

வாசு பன்சால் மொஹாலியில் ஒரு தனியார் சிபிஎஸ்இ பள்ளியின் 8 ஆம் வகுப்பு மாணவி. 

வாசுவுக்கு இளமையில் போலியோ தாக்கியதில் கால்கள் செயலிழந்து விட்டன. எனவே பள்ளி செல்லத் தொடங்கிய ஆரம்ப நாட்கள் முதலே அவருக்கு சக்கர நாற்காலியும் உடலோடு இணைந்த பிற உறுப்புகளில் ஒன்றென ஆனது. தொடக்கப்பள்ளி வகுப்புகளில் பயிலும் வரை வாசுவுக்கு தனது சக்கர நாற்காலிப் பயணம் ஒரு பெரும் சுமையாகத் தோன்றியதில்லை. அப்படியே கழிப்பிடங்களுக்கோ அல்லது சக்கர் நாற்காலியற்று நடந்து கடக்க வேண்டிய வேறு சில இடங்களுக்கோ செல்வதாக இருந்தாலும் கூட அம்மாவோ அல்லது பள்ளியின் பெண் துப்புரவுப் பணியாளர்களில் ஒருவரோ வாசுவை தூக்கிச் சென்று உதவியதால் அப்போதெல்லாம் ஓரிடத்திலிருந்து பிறிதொரு இடத்துக்குச் செல்வது என்பது வாசுவுக்கு கடினமான காரியமாகத் தோன்றவில்லை. 

ஆனால் 8 ஆம் வகுப்பு வந்ததும் வாசுவுக்கு உடல் ரீதியான தர்ம சங்கடங்கள் ஆரம்பமாயின. முதலாவதாக சிறுமி வளர வளர அவரது உடல் எடை அதிகரித்தது. அதனால் அம்மாவாலோ, பணியாளர்களாலோ அவரை தூக்கிச் சென்று விடுவது சற்றுக் கடினமான காரியமாக மாறியது. அது மட்டுமல்ல வாசு படித்த பள்ளியில் சோதனைச் சாலைகள் அனைத்துமே மேல்மாடிகளில் இருந்தன. அறிவியல் சோதனை வகுப்புகளின் போது மட்டுமல்ல மொத்தப் பள்ளியும் சேர்ந்து ஈடுபடும் சில இண்டோர் விழாக்களும் கூட மேல்மடியின் விஸ்தாரமார கூடத்தில் நடத்தப் பட்டதால் வாசுவை அங்கே அழைத்துச் செல்வது என்பது கடினமான காரியமாக இருந்தது. இந்தக் காரணங்களை எல்லாம் முன்னிட்டு பள்ளி நிர்வாகம் இதற்கென்ன தீர்வு என ஆலோசிக்கத் தொடங்கியது.

சிபிஎஸ்இ பள்ளிக் கொள்கைகளில் ஒன்று மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்காக லிஃப்ட் அல்லது ராம்ப் வசதி செய்து தரப்பட வேண்டும் என்பது. வாசுவின் பள்ளியில் ராம்ப் வசதி செய்து தர இடப்பற்றாக்குறை இருந்த காரணத்தால் அப்பள்ளி நிர்வாகத்தார் ரூ 14 லட்சம் ஒதுக்கி வாசு மாதிரியான மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு உதவும் நோக்கில் தற்போது லிஃப்ட் வசதி செய்து கொடுத்துள்ளனர். இது வாசுவுக்காக மட்டும் அல்ல. சிபிஎஸ்இ பள்ளி விதிமுறைகளில் இதுவும் ஒன்றாக இருப்பதால் வாசு அதற்கு முன்னதி ஏர் ஆகி இருக்கிறார். வாசு மூலமாக உண்டான லிஃப்ட் வசதி பிற்காலத்தில் அப்பள்ளியில் பயிலும் பிற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கும் மிகப் பயனுடையதாக விளங்கலாம்.

மாற்றுத் திறனாளி மாணவியின் தர்ம சங்கடங்களை உணர்ந்து பள்ளி நிர்வாகம் லிஃப்ட் அமைத்துக் கொடுத்தது பள்ளி விதிகளில் ஒன்று என்றாலும் காலத்தில் அந்த உதவியை நடைமுறைப்படுத்தியமைக்காக அந்தப் பள்ளியைப் பாராட்டினால் தவறில்லை!

Image courtesy: Hindusthan times.

Article concept: Uc news.

Related Article

பரீட்சையில் சென்டம் வாங்கினால் ‘சென்னை டு கோவை’ விமான டிக்கெட் பரிசு! அறிவித்த டீச்சரும் அசத்திய மாணவிகளும்!

இந்த மழைக்காலத்தை பாதுகாப்புடன் எப்படியெல்லாம் கடக்கலாம்? இந்தாங்க பிடிங்க டிப்ஸ்!

எல்லோரும் தான் ஆத்திச்சூடி படித்தோம், ஆனால் அதன் அர்த்தம் முழுதாக விளங்கியது ஐஷா ஃபாத்திமாவுக்கு மட்டும் தான்!

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முதலாம் வகுப்புக்கு மட்டுமல்ல; கிண்டர் கார்டன் வகுப்புகளுக்கும் பாடச்சுமை மிக அதிகமே! பூனைக்கு மணி கட்டுவது யார்?

பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் ஆசை நிறைவேறுமா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.