‘நீரின்றி அமையாது உலகு’ எனும் வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப உலகின் ஒட்டுமொத்த நீர்த்தேவையும் மழையால் அன்றோ நிவர்த்தி செய்யப்படுகிறது. பூமிப்பந்தின் இண்டு இடுக்குகள் விடாது அத்தனை ஏரிகளையும், குளங்களையும், குட்டைகளையும், ஆறுகளையும், சுனைகளையும், சிறு கடல், குறுங்கடல், மற்றும் பெருங்கடல், மாக்கடல்கள் அத்தனையும் நிரப்பி ஆகர்சிக்கும் சக்தி மழைக்கு மட்டுமே உரித்தானது. ஆகையால் அத்தகைய மழையை நாம் வேண்டாமென ஒரு போதும் சொல்லக் கூடாது. அதனால் தான் ‘ரெயின் ரெயின் கோ அவே’ என்று பாடப்பட்டு வந்த நர்சரிப் பள்ளிப் பாடலைக் கூட சமீப காலங்களாக பல இடங்களில் ரெயின் ரெயின் கம் அகெயின் என்று மாற்றிப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.