மழையால் ஆயிரம் இன்னல்களை அனுபவித்தாலும் மழை எப்போதும் வரவேற்கத்தக்கதாகவே இருக்கிறது. ஏனெனில் மழை தேவர்கள் மகிழ்ந்து பொழிவிக்கும் தேவாமிர்தம்! மழையால் மண் நெகிழும். மண் நெகிழ்கையில் வேளாண்மை என்ற பெயரில் பூமி வறட்சியின் போது தான் உள்வாங்கிய அத்தனையையும் உயிர் சக்திகளாக்கி தானியங்களாகவும், காய்கறிகளாகவும், கீரைகளாகவும், பழங்களாகவும், கிழங்குகளாகவும் இன்னபிற அத்யாவசியப் பொருட்களாகவும் வாரி வழங்கும்.
‘நீரின்றி அமையாது உலகு’ எனும் வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப உலகின் ஒட்டுமொத்த நீர்த்தேவையும் மழையால் அன்றோ நிவர்த்தி செய்யப்படுகிறது. பூமிப்பந்தின் இண்டு இடுக்குகள் விடாது அத்தனை ஏரிகளையும், குளங்களையும், குட்டைகளையும், ஆறுகளையும், சுனைகளையும், சிறு கடல், குறுங்கடல், மற்றும் பெருங்கடல், மாக்கடல்கள் அத்தனையும் நிரப்பி ஆகர்சிக்கும் சக்தி மழைக்கு மட்டுமே உரித்தானது. ஆகையால் அத்தகைய மழையை நாம் வேண்டாமென ஒரு போதும் சொல்லக் கூடாது. அதனால் தான் ‘ரெயின் ரெயின் கோ அவே’ என்று பாடப்பட்டு வந்த நர்சரிப் பள்ளிப் பாடலைக் கூட சமீப காலங்களாக பல இடங்களில் ரெயின் ரெயின் கம் அகெயின் என்று மாற்றிப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
மழை என்றால் நச நசப்பும், காய்ச்சலும், சளித்தொல்லையும், மழைக்காலத்துக்கே உண்டான சில தொற்றுநோய்களும் இலவச இணைப்புகள். அதன் காரணமாகத்தான் மக்கள் சில நேரங்களில் மழையை நொந்து கொள்கிறார்களே தவிர நிச்சயம் அது மழையின் மீதான வெறுப்பு இல்லை. சரி இந்த மழைக்காலம் இதோ நேற்று முதல் வெகு சின்சியராகத் தன் வேலையைத் தொடங்கி விட்டது. இப்போது மக்களான நாம் இந்த மழையையும் ரசித்துக் கொண்டு அதன் இலவச இணைப்புகளில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ளவும் முடியும் என்று தெரிந்து கொள்வோம். ஏனெனில் மழையை ரசிப்பதைக் காட்டிலும் முக்கியமானது அதை தூஷிக்காமல் இருப்பது.
மேற்கண்ட வழிமுறைகள் அனைத்தையும் தவறாமல் பின்பற்றி இந்த மழைக்காலத்தை இனிதாகக் கடப்போம்.
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்!
அளவறிந்து ‘பீர்’ அருந்தினால் கிடைக்கக் கூடிய அளப்பறிய ஹெல்த் பெனிஃபிட்கள்!
காமெடி சேனல்கள் போர் அடிக்கையில் வெடிச்சிரிப்புக்கு உத்தரவாதமளிக்கும் ட்ரால்கள்!
திறமையான செஃப் ஆனாலும் கூட ‘பெர்ஃபெக்ட் சமையல்’ கற்றுக் கொள்வதென்றால் லேசுப்பட்ட காரியமில்லை!
கூந்தலில் வீடு கட்டி அடித்தால் அதற்குப் பெயர் தான் ‘ஹேர் ஆர்ட்’!