எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

திறமையான செஃப் ஆனாலும் கூட ‘பெர்ஃபெக்ட் சமையல்’ கற்றுக் கொள்வதென்றால் லேசுப்பட்ட காரியமில்லை!

ஆட்டுக்கறி எவ்வளவு நேரம் வேக வைக்கப் பட்டால் தலைமை செஃப் எதிர்பார்த்தது போல மட்டன் மிருதுவாக இருக்கும் எனத் தெரிந்து கொள்வதற்காகத் தான் இந்தச் சோதனை

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:33 pm IST

தமிழ்நாட்டில் விஜய் டி.வி புகழ் செஃப் வெங்கடேஷ் பட்டைத் தெரியாதவர்களிருக்க முடியாது. அவரது சமையல் நிகழ்ச்சிக்கு லட்சோபலட்சம் ரசிகர்கள் உண்டு. சமீபத்தில் யூ டியூபில் அவரது நேர்காணல் ஒன்றை காண நேர்ந்தது. மிக சுவாரஸ்யமான அந்த நேர்காணலில் வெங்கடேஷ் பட் நினைவு கூர்ந்த ஒரு விஷயம் ‘நச்’ ரகம். இந்த உலகில் அது செஃப் வேலையாகட்டும், இல்லை வேறு எந்த வேலையாகட்டும் எதிலுமே கற்றுக் கொள்வதில் இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வு அதாவது டெடிகேஷன் என்ற ஒரு விஷயம் பூரணமாக அமைந்து விட்டால் அதற்குப் பின்னால் அவர்களது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்பது தான் அது! அதற்கு உதாரண நிகழ்வாக அவர் குறிப்பிட்டதும் கூட ‘வாவ்’ ரகமான ஒரு சம்பவம்.

பாரம்பர்ய பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் பட் ஒரு தீவிரமான வெஜிடேரியன். ஆனால் செஃப் ஆக வந்து விட்டு வெஜிடேரியன் உணவை மட்டுமே தான் சமைப்பேன் என்றால் 5 நட்சத்திர உணவகங்களில் வேலையில் நீடிக்க முடியுமோ?! அந்த உணவகங்களின் சமையலறைக்கு வரும் அத்தனையையுமே... ஏன் அதன் விருந்தினர்கள் விரும்பும் அத்தனை வகை உணவுகளையுமே ஒரு செஃப் சமைத்துக் கொடுத்து தான் தீர வேண்டும். அதன்படி வெங்கடேஷ் பட்டை, ஆரம்ப நாட்களில் அவரது தலைமை சமையல்காரர் பணியாற்றப் பணித்த இடம், அசைவ உணவு வகைகளுக்காக கறி வெட்டும் கூடம். அங்கே மீன், மட்டன், சிக்கன், என கறி வெட்டிப் பழகுவதற்கே தனக்கு குறைந்த பட்சம் 6 மாதங்கள் ஆனது என்கிறார் வெங்கடேஷ் பட். 

அதுமட்டுமல்ல இரண்டு வருடங்கள் இவர் பயிற்சி செஃப் ஆகப் பணிபுரிந்து வேலை கற்றுக் கொண்டு வெளிவரவும், இவருக்கு மேலே இருந்த இரு பிரதான சமையல்காரர்கள் வேலையை விட்டு வேறிடம் செல்லவும் சரியாக இருக்கவே அவர்கள் வகித்த கிச்சன் செஃப் பதவி வெங்கடேஷ் பட்டுக்கு வருகிறது. அப்போது இவரது தலைமை செஃப் ஆக இருந்த சந்திர மெளலி என்பவர் சைவ பட்ஷிணியான வெங்கடேஷ் பட் அசைவ உணவுகளைச் சமைப்பதிலும் நன்றாகத் தேறி இருக்கிறாரா? இல்லையா என்பதைச் சோதிக்க தனக்கு இரவு உணவாக ஆப்பமும், மட்டன் ஸ்டியூவும் சாப்பிடச் சமைத்துத் தரச்சொல்லி கேட்டிருக்கிறார். தனக்கு தொழில் கற்றுத்தந்த குரு கேட்டு விட்டாரே... என்று மட்டன் ஸ்டியூவையும், ஆப்பத்தையும் ஒரு கை பார்த்து விடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு அசத்தலாக சமைத்து எடுத்துச் சென்றூ பரிமாறியிருக்கிறார் வெங்கடேஷ் பட். பரிமாறி விட்டு அவர் என்ன சொல்லப் போகிறாரோ! என்று அவரது வாயைப் பார்த்துக் கொண்டு இவர் நிற்க... தலைமை செஃப்போ, இவர் சமைத்த மட்டன் ஸ்டியூவை எடுத்து அப்படியே இவரது புறங்கையில் நன்றாகப் பிடித்து அழுத்தித் தேய்த்துக் காட்டியிருக்கிறார். ஏன் தெரியுமா?

மட்டன் நன்கு வெந்திருந்தால் இவர் தேய்த்த தேய்ப்புக்கு அப்படியே பூவிலிருந்து இதழ் உதிர்வது போல பூப்போல தனித்தனியாக மெத்தெனப் பிய்ந்து வரும். ஆனால், பார் நீ சமைத்த மட்டன் சரியாக வேகாததால் எத்தனை அழுத்தியும் அப்படியே கல் மாதிரி கிடக்கிறது’ என்றிருக்கிறார். இப்படி இருந்தால் 5 நட்சத்திர விடுதிகளுக்கு வரும் விருந்தினர்களுக்கு நீ சமைத்திருப்பது பிடித்திருக்கிறதா? இல்லையா? என்பதை நீ எப்படி தெரிந்து கொள்வாய்? என்பது போல ஒரு பார்வை பர்த்து விட்டு தலைமை செஃப் நகர்ந்து விட்டார்.

அதன் பிறகு நடந்த விஷயம் தான் அடடா! இதல்லவோ அர்ப்பணிப்பு ரகம்.

Story image

அன்று இரவு முழுவதும் செஃப் வெங்கடேஷ் பட் தூங்கவில்லை, உடை மாற்றவில்லை, அன்று வீடு திரும்பும் எண்ணமே இல்லை அவருக்கு. உடனடியாக மீண்டும் சமையலறைக்குச் சென்றார். தனக்குத் தேவையான அளவு மட்டனை கறி வெட்டும் இடத்தில் இருந்து எடுத்தார். எடுத்த ஆட்டுக்கறியை 20 நிமிடங்கள், 30 நிமிடங்கள், 40 நிமிடங்கள் எனத் தனித்தனியாகப் பிரித்து தனித்தனி பாத்திரங்களில் வேக வைத்துப் பரிசோதிக்கத் தொடங்கினார். ஆட்டுக்கறி எவ்வளவு நேரம் வேக வைக்கப் பட்டால் தலைமை செஃப் எதிர்பார்த்தது போல மட்டன் மிருதுவாக இருக்கும் எனத் தெரிந்து கொள்வதற்காகத் தான் இந்தச் சோதனை. முடிவில் வெங்கடேஷ் பட் ஆட்டுக்கறியை வேக வைப்பதற்கான பெர்ஃபெக்ட் குக்கிங் டைமை ஒருவழியாகக் கண்டறிந்தார்.

மறுநாள் காலையில் தலைமை செஃப், உணவகத்துக்கு திரும்பி வரும் போது... முதல் நாள் பார்த்த அதே உடையில் கையில் அவருக்கான பெர்ஃபெக்ட் மட்டன் ஸ்டியூவுடன் நின்ற வெங்கடேஷ் பட்டைக் கண்டதும் அவருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. தன் சிஷ்யப்பிள்ளையை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டு அப்போது அவர் சொன்னாராம். ‘ எதிர்காலத்தில் நீ ஒரு மிகப்பெரிய செஃப் ஆக வருவாய்... உன் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது’ என்று. அது நிஜமான சந்தோஷத்தில் இந்தச் சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், என் வாழ்க்கையில் நான் பெற்ற மிக அரிய பாராட்டாக இதைக் கருதுகிறேன் எனத் தெரிவித்தார் வெங்கடேஷ் பட்.

நிஜம் தான்.
 
சமையற்கலை என்றில்லை நாம் செய்யும் எந்த ஒரு வேலையையுமே முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்தால் அதில் கிடைக்கும் பலனே அலாதியானது தான்.

Thanks to you tube & BEHINDWOODS TV
 

Related Article

மீண்டும், மீண்டும் சூடாக்கிச் சாப்பிடக் கூடாத உணவுப் பொருட்கள்...

சாக்லெட் சாப்பிட்டா உடல்நலனுக்கு கேடுன்னு யாரு சொன்னாங்க?!

கூந்தலில் வீடு கட்டி அடித்தால் அதற்குப் பெயர் தான் ‘ஹேர் ஆர்ட்’!

எல்லோரும் தான் ஆத்திச்சூடி படித்தோம், ஆனால் அதன் அர்த்தம் முழுதாக விளங்கியது ஐஷா ஃபாத்திமாவுக்கு மட்டும் தான்!

செம்பினால் தீரக் கூடிய நோய்கள் பல... தேவைப்படுவோர் ஒருமுறை முயற்சித்துப் பார்க்கலாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.