ஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு! இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு
/

பொன்னாய் பூவாய் நகைகளைப் பத்திரமாக வைத்துக் கொள்வது எப்படி?

நின்று கொண்டு ஆபரணங்களை அணிய வேண்டாம். கல்பதித்த ஆபரணங்களை நின்று கொண்டு

News image
Updated On :25 ஜூலை 2018, 7:35 am

ஆர். ஜெயலட்சுமி

நின்று கொண்டு ஆபரணங்களை அணிய வேண்டாம். கல்பதித்த ஆபரணங்களை நின்று கொண்டு அணிந்தால் அது கீழே விழுந்து நொறுங்கிவிடும். அதனால் உட்கார்ந்தபடி அணியுங்கள்.

கண்ணாடி உள்ள வாஷ்பேசின் அருகில் நின்று கொண்டும் ஆபரணங்களை அணிய வேண்டாம்.

மூக்குத்தி அதன் சுரை பகுதிகள் கைதவறி வாஷ் பேசினில் விழுந்தால் அப்படியே உள்ளே போய்விடும்.

கிரீம், வியர்வை, ஸ்பிரே போன்றவை ஆபரணங்களில் படாமல் இருப்பது நல்லது. அதனால் மேக் - அப் முடித்த பின்பு ஆபரணங்களை அணியுங்கள். மேக் - அப்பைக் கலைக்கும் முன்பு ஆபரணங்களைக் கழற்றி விடுங்கள்.

வழக்கமாகப் பயன்படுத்தும் ஆபரணங்களை மாதம் ஒரு முறையாவது கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

தங்க ஆபரணங்களில் மெர்குரி விழாமல் பார்த்து கொள்ள வேண்டும். அது விழுந்தால் தங்கத்தின் நிறம் மாறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.