1. மழைக்காலம் வந்தாலே மகராசி சங்கீதம்தான்...
2. அரைசாண் மனிதனுக்கு வயிறு நிறைய முட்டை...
3. சிவப்புப் பைக்குள் சில்லறை...
4. உலகம் சுற்றுபவன், ஆனாலும் இவனை ஒருவரும் கண்ட தில்லை...
5. அக்கா தங்கை உறவுண்டு. அருகருகே வீடு உண்டு. கிட்டக் கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள்...
6. உழைக்க உழைக்கத் தோன்றும் முத்துக்கள்...
7. பந்தலுக்குள்ளே பாம்பு தொங்குது...
8. ஊளையிட்டுக் கொண்டே ஊரைச் சுமப்பவன்...
9. கடல் நீரில் மறைந்திருக்கும் கல்...
விடைகள்:
1. தவளை
2. வெண்டைக்காய்
3. காய்ந்த மிளகாய்
4. காற்று
5. கண்கள்
6. வியர்வை
7. புடலங்காய்
8. ரயில்
9. உப்புக்கல்