தேனி மாவட்டம் பெரியகுளத்தை சார்ந்த விவசாயிகள் பூச்சிக்கொல்லி கலக்காமல் இயற்கை முறையில் விளைவிக்கும் வெண்டைக்காய், கத்தரிக்காய், தக்காளி போன்ற காய்கறிகளை சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். இயற்கை முறையில் விளைவிக்கப்படும் இந்தக் காய்கறிகளுக்கு அந்த நாடுகளில் மிகுந்த வரவேற்பு இருப்பதாக தேனி மாவட்ட விவசாயிகள் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை ஒட்டிய சுற்றுவட்டாரங்களில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி வேதியியல் பூச்சிக்கொல்லி மருந்துக்களைப் பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி காய்கறிகளைப் பயிரிட்டு வருகிறார்கள். இந்தக் காய்கறிகளுக்கு சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் மிகுந்த வரவேற்பு இருப்பதால் விவசாயிகள் இருக்கும் இடத்திற்கே தேடி வந்து கொள்முதல்காரர்கள் காய்கறிகளைத் தரம் பார்த்து பிரித்து வாங்கிச் செல்கிறார்கள். இதனால் விவசாயிகளின் போக்குவரத்துச் செலவும் பெருமளவுக்குக் குறைகிறது. அத்துடன் இங்கு வாங்கப்படும் காய்கறிகள் விமானம் மூலமாக மறுநாளே சிங்கப்பூர், மலேசியா சென்று அடைவதால் காய்கறிகளைப் ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்கத் தேவையென பிரிசர்வேட்டிவ்கள் எதையும் சேர்க்கும் அவசியமும் இல்லாமலாகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகளில் பலர் இயற்கை முறை விவசாயத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விவசாயிகளின் மகிழ்ச்சியைக் கண்டு ஆனந்தப் படுவதா? அல்லது இந்தக் காய்கறிகளை எல்லாம் நம்மூர் மக்கள் நல்ல விலை கொடுத்து வாங்கி உண்ண முடியாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து லாபம் சம்பாதிக்கும் நிலை இருக்கிறதே?! என்று ஆதங்கப்படுவதா? என்று தெரியவில்லை.
எது எப்படி விவசாயிகள் மனம் மகிழ்ந்தால் சரி!
வில்லேஜ் விஞ்ஞானிகளுக்கு ஒரு அறிவிப்பு, அறிவியல் மேதை ஜி.டி நாயுடு விருது: ரூ 1 லட்சம் பரிசுத் தொகை!
நட்ட நடுக்கடல், பெரும்புயல்... 5 நாட்கள் மழைநீரை மட்டுமே அருந்தி உயிர் தப்பிய மீனவர்!
நிர்மலா சீதாராமன் கொண்டு வந்த சிவப்பு நிறப்பையின் சுவாரஸ்யப் பின்னணி!
உங்களுக்கு தமிழ் மேல் தீராக்காதலா? அப்படியென்றால் இந்தப் பழமொழிகளுக்கு அர்த்தம் சொல்லுங்களேன்!