25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

உங்களுக்கு சமோசா பிடிக்குமா? இதைப் படித்துவிடுங்கள்!

Published On :7 பிப்ரவரி 2024, 3:36 pm IST

சிலருக்கு மாலை வேளைகளில் டீயுடன் சமோசா சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். அதுவும் முறுமுறுப்பான சமோசாவுக்குள் உருளைக்கிழங்கு அல்லது வெங்காய மசாலாவை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. இந்த ருசியான சமோசாவின் நெடிய வரலாறு என்னவென்று தெரியுமா?

இப்போது 'சமோசா' என்பது மிகவும் பிரபலமான இந்திய உணவுப் பொருளாக மாறிவிட்டிருக்கிறது. சர்வதேச அளவில் அறியப்படுகிறது. ஆனால், சமோசாவின் மூலம் மத்திய கிழக்கு நாடுகள் என்று சொன்னால் பலருக்கும் வியப்பாக இருக்கும்.

Story image

மத்திய கிழக்கு நாடுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், மாமிசத் துண்டுகள் அடங்கிய 'சம்புசச்' என்கிற பதார்த்தம் மிகவும் பிரபலம். 10-ஆவது நூற்றாண்டில் அரேபியர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து நுழைந்த போது, சம்புசச்சை இங்கே அறிமுகப்படுத்தினார்கள்.

வடநாட்டில் பஞ்சாபியர்களும், ராஜஸ்தானியர்களும் அதை உருளைக்கிழங்கையும், வெங்காயத்தையும் அடிப்படையாகக் கொண்ட தாவர உணவாக மாற்றி, இந்தியா முழுவதும் பிரபலப்படுத்தி விட்டனர். இப்போது சம்புசச் வழக்கொழிந்து உலகம் முழுவதும் சமோசா பிரபலமடைந்து விட்டிருக்கிறது.
 - சத்தீஷ்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.