நாள் ஒன்றுக்கு 11 மணி நேரத்திற்கு அதிகமாகவோ அல்லது நான்கு மணி நேரத்திற்கு குறைவாகவோ தூங்கும் நபர்களுக்கு நுரையீரல் சம்மந்தப்பட்ட நோய்கள் வர வாய்ப்பு அதிகம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நேஷனல் சயின்ஸ் அகாடமியின் புரோசிடிங்ஸ்(Proceedings) இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு ஒருவர் தூங்கும் நேரத்தைப் பொறுத்து நுரையீரலில் ஏற்படும் மாறுபாடுகளை கண்காணித்தது.
அதன்படி, நாள் ஒன்றுக்கு ஏழு மணி நேரம் தூங்குவோருடன் ஒப்பிடும்போது, 11 மணி நேரத்திற்கும் மேலாக அல்லது நான்கு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் நபர்களுக்கு குணப்படுத்த முடியாத நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் எனும் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 2-3 மடங்கு அதிகம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுரையீரல் ஃபைப்ரோஸிஸ்(Pulmonary fibrosis) என்பது தற்போது குணப்படுத்த முடியாத நோயாக கருதப்படுகிறது.

மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் ஜான் பிளேக்லி இதுகுறித்து கூறுகையில், 'நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் மற்றும் தூக்க காலம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைப் படிப்பதற்கு எங்களுக்கு நீண்ட நாட்கள் ஆகியது. மேலும், சில ஆய்வு முடிவுகள் இதனை உறுதி செய்தால் சரியான நேரத்திற்கு தூங்குவது இந்தப் பேரழிவு நோயின் தாக்கத்தைக் குறைக்கும்' என்று அவர் கூறினார்.
ஒரு நாளைக்கு நான்கு மணிநேரம் அல்லது அதற்கும் குறைவாக தூங்கும் நபர்களுக்கு நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் வருவதற்கான வாய்ப்பு இரட்டிப்பாகிறது.
அதே நேரத்தில் ஒரு நாளில் 11 மணி நேரம் அல்லது அதற்கு மேல் தூங்குவோர் இந்நோய்க்கான வாய்ப்பை மூன்று மடங்காக வழங்குகின்றனர். அதேபோன்று நள்ளிரவில் விழித்திருக்கக் கூடியவர்கள் முக்கியமாக இரவுப் பணியில் இருப்பவர்களிடையே பிற்காலத்தில் இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 'REVERBa' என்ற ஒரு புரதத்தை கண்டறிந்துள்ளனர். அதன்படி, இந்த புரதத்தின் மூலமாக, நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரல்களில் உள்ள கொலாஜனைக் குறைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
எனவே சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் எழுந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை மாவட்டத்தில் 87.97 சதவீதம் வாக்குப்பதிவு: அமைதியான முறையில் ஓய்ந்தது தோ்தல்
இளைஞா்களின் வாக்குகள் சிதறும் எனக் கூறுவது கற்பனை: திருச்சி சிவா எம்.பி.

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.43 கோடி

கடும் வெயிலிலும் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டையில் வாக்களிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


