திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தூக்கம் அதிகமானாலும், குறைவானாலும் ஆபத்துதான்!

நாள் ஒன்றுக்கு 11 மணி நேரத்திற்கு அதிகமாகவோ அல்லது நான்கு மணி நேரத்திற்கு குறைவாகவோ தூங்கும் நபர்களுக்கு நுரையீரல் சம்மந்தப்பட்ட நோய்கள் வர வாய்ப்பு அதிகம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

News image
Updated On :2 ஜனவரி 2020, 10:41 am

DIN

நாள் ஒன்றுக்கு 11 மணி நேரத்திற்கு அதிகமாகவோ அல்லது நான்கு மணி நேரத்திற்கு குறைவாகவோ தூங்கும் நபர்களுக்கு நுரையீரல் சம்மந்தப்பட்ட நோய்கள் வர வாய்ப்பு அதிகம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நேஷனல் சயின்ஸ் அகாடமியின் புரோசிடிங்ஸ்(Proceedings) இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு ஒருவர் தூங்கும் நேரத்தைப் பொறுத்து நுரையீரலில் ஏற்படும் மாறுபாடுகளை கண்காணித்தது. 

அதன்படி, நாள் ஒன்றுக்கு ஏழு மணி நேரம் தூங்குவோருடன் ஒப்பிடும்போது, 11 மணி நேரத்திற்கும் மேலாக அல்லது நான்கு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் நபர்களுக்கு குணப்படுத்த முடியாத நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் எனும் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 2-3 மடங்கு அதிகம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுரையீரல் ஃபைப்ரோஸிஸ்(Pulmonary fibrosis) என்பது தற்போது குணப்படுத்த முடியாத நோயாக கருதப்படுகிறது. 

Story image


மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் ஜான் பிளேக்லி இதுகுறித்து கூறுகையில், 'நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் மற்றும் தூக்க காலம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைப் படிப்பதற்கு எங்களுக்கு நீண்ட நாட்கள் ஆகியது. மேலும், சில ஆய்வு முடிவுகள் இதனை உறுதி செய்தால் சரியான நேரத்திற்கு தூங்குவது இந்தப் பேரழிவு நோயின் தாக்கத்தைக் குறைக்கும்' என்று அவர் கூறினார்.

ஒரு நாளைக்கு நான்கு மணிநேரம் அல்லது அதற்கும் குறைவாக தூங்கும் நபர்களுக்கு நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் வருவதற்கான வாய்ப்பு இரட்டிப்பாகிறது.

அதே நேரத்தில் ஒரு நாளில் 11 மணி நேரம் அல்லது அதற்கு மேல் தூங்குவோர் இந்நோய்க்கான வாய்ப்பை மூன்று மடங்காக வழங்குகின்றனர். அதேபோன்று நள்ளிரவில் விழித்திருக்கக் கூடியவர்கள் முக்கியமாக இரவுப் பணியில் இருப்பவர்களிடையே பிற்காலத்தில் இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 'REVERBa' என்ற ஒரு புரதத்தை கண்டறிந்துள்ளனர். அதன்படி, இந்த புரதத்தின் மூலமாக, நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரல்களில் உள்ள கொலாஜனைக் குறைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

எனவே சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் எழுந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.