சிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

தூக்கம் அதிகமானாலும், குறைவானாலும் ஆபத்துதான்!

நாள் ஒன்றுக்கு 11 மணி நேரத்திற்கு அதிகமாகவோ அல்லது நான்கு மணி நேரத்திற்கு குறைவாகவோ தூங்கும் நபர்களுக்கு நுரையீரல் சம்மந்தப்பட்ட நோய்கள் வர வாய்ப்பு அதிகம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:48 pm IST

நாள் ஒன்றுக்கு 11 மணி நேரத்திற்கு அதிகமாகவோ அல்லது நான்கு மணி நேரத்திற்கு குறைவாகவோ தூங்கும் நபர்களுக்கு நுரையீரல் சம்மந்தப்பட்ட நோய்கள் வர வாய்ப்பு அதிகம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நேஷனல் சயின்ஸ் அகாடமியின் புரோசிடிங்ஸ்(Proceedings) இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு ஒருவர் தூங்கும் நேரத்தைப் பொறுத்து நுரையீரலில் ஏற்படும் மாறுபாடுகளை கண்காணித்தது. 

அதன்படி, நாள் ஒன்றுக்கு ஏழு மணி நேரம் தூங்குவோருடன் ஒப்பிடும்போது, 11 மணி நேரத்திற்கும் மேலாக அல்லது நான்கு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் நபர்களுக்கு குணப்படுத்த முடியாத நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் எனும் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 2-3 மடங்கு அதிகம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுரையீரல் ஃபைப்ரோஸிஸ்(Pulmonary fibrosis) என்பது தற்போது குணப்படுத்த முடியாத நோயாக கருதப்படுகிறது. 

Story image


மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் ஜான் பிளேக்லி இதுகுறித்து கூறுகையில், 'நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் மற்றும் தூக்க காலம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைப் படிப்பதற்கு எங்களுக்கு நீண்ட நாட்கள் ஆகியது. மேலும், சில ஆய்வு முடிவுகள் இதனை உறுதி செய்தால் சரியான நேரத்திற்கு தூங்குவது இந்தப் பேரழிவு நோயின் தாக்கத்தைக் குறைக்கும்' என்று அவர் கூறினார்.

ஒரு நாளைக்கு நான்கு மணிநேரம் அல்லது அதற்கும் குறைவாக தூங்கும் நபர்களுக்கு நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் வருவதற்கான வாய்ப்பு இரட்டிப்பாகிறது.

அதே நேரத்தில் ஒரு நாளில் 11 மணி நேரம் அல்லது அதற்கு மேல் தூங்குவோர் இந்நோய்க்கான வாய்ப்பை மூன்று மடங்காக வழங்குகின்றனர். அதேபோன்று நள்ளிரவில் விழித்திருக்கக் கூடியவர்கள் முக்கியமாக இரவுப் பணியில் இருப்பவர்களிடையே பிற்காலத்தில் இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 'REVERBa' என்ற ஒரு புரதத்தை கண்டறிந்துள்ளனர். அதன்படி, இந்த புரதத்தின் மூலமாக, நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரல்களில் உள்ள கொலாஜனைக் குறைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

எனவே சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் எழுந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.