காற்று மாசினால் பெரியவர்களைவிட குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
சுற்றுச்சூழலில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது காற்று மாசு. நவீனம், தொழில்நுட்ப பெருக்கம், வாகனப் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களினால் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக மக்கள் தொகை அதிகமுள்ள தில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.
இந்நிலையில் காற்று மாசு குறித்து அமெரிக்க ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஓர் ஆய்வின் முடிவுகள் 'நியூ டிரெக்ஷன்ஸ் ஆப் சைல்டு அண்ட் அடல்சண்ட் ரிசர்ச்'(New Directions for Child and Adolescent Research) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | முகப்பருவால் பிரச்னையா? இதை மட்டும் ட்ரை பண்ணுங்க, போதும்!
சாக்ரமெண்டோ பகுதியில் 9-11 வயதுடைய 100க்கும் மேற்பட்ட ஆரோக்கியமான குழந்தைகளின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்தனர். அவர்களின் வீடுகளுக்கு அருகில் உள்ள சுற்றுச்சூழல், காற்று மாசு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இதில், காற்று மாசு அதிகமுள்ள இடங்களில் வாழும் குழந்தைகளின் உடல்நலனில் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
'குழந்தைகள் அதிக காற்று மாசு சூழ்நிலையில் இருந்தால், இதயத் துடிப்பில் மாற்றம் ஏற்படுகிறது. இன்டர்லூகின் அளவு மாறுவதையும் ரத்த மாதிரிகள் காட்டுகின்றன.
காட்டுத்தீயின் போது வெளியிடப்படும் மாசுபாடுகளின் வெளிப்பாடு குழந்தைகளின் பல எதிர்மறையான உடல்நல விளைவுகளுடன் தொடர்புடையது என்றும் பெரியவர்களை விட சிறியவர்களின் அதாவது குழந்தைகளின் உறுப்பு அமைப்புகளுக்கு காற்று மாசு உடனடியாக விளைவாற்றுகின்றன.
இதயத்தில் பிரச்னைகள், ஆஸ்துமா, நுரையீரல் செயல்பாடு குறைதல், கவனக்குறைவு, ஹைபராக்டிவிட்டி போன்ற நரம்பியல் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது' என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குழந்தைகள் காற்று மாசு அதிகமுள்ள இடங்களில் இருப்பதை தவிர்க்கலாம், முடிந்தால் முகக்கவசம் உள்ளிட்டவற்றை அணிந்துகொள்ளலாம்.
இதையும் படிக்க | உருளைக்கிழங்கு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்

சென்னை ரயில்வே கோட்டத்தில் 11 புதிய நடைமேம்பாலங்கள்

‘விரைவில் புத்திசாலித்தனமாக மாறுங்கள்’ - ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

பேரூா் பட்டீசுவரா் கோயில் நகை மோசடி: எழுத்தருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


