/

வறண்ட சருமமா? சரிசெய்ய உதவும் 5 இயற்கைப் பொருள்கள் இதோ!

குளிர் காலத்தில் சருமப் பிரச்னைகள் அதிகம் ஏற்படுவது சாதாரணம்தான். அதிக குளிரினால் உடலில் நீரேற்றம் குறைவதனால் சருமம் வறண்டு போதல், சருமச் சுருக்கம் உள்ளிட்ட ஏற்படும். 

News image

கோப்புப்படம்

Updated On :6 பிப்ரவரி 2024, 6:20 pm IST

குளிர் காலத்தில் சருமப் பிரச்னைகள் அதிகம் ஏற்படுவது சாதாரணம்தான். அதிக குளிரினால் உடலில் நீரேற்றம் குறைவதனால் சருமம் வறண்டு போதல், சருமச் சுருக்கம் உள்ளிட்ட ஏற்படும். 

இந்த நேரத்தில் சருமத்தை வறண்டுபோகாமல் பாத்துக்கொள்ள வேண்டும். அதற்கு வீட்டில் உள்ள சில எளிய இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தலாம். 

குளிர் காலத்தில் சருமத்தை நீரேற்றம் செய்ய 3 சிறந்த மாய்சரைசர்கள் பயன்படுகின்றன. 

தேன்: சிறந்த மாய்சரைசர்களில் முதன்மையானது தேன். சில துளிகள் தேன் எடுத்து சருமத்தில் மசாஜ் செய்ய வேண்டும். மாய்சரைசராக மட்டுமின்றி சருமத்தில் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும். 

பாதாம்: வறண்ட சருமத்திற்கு பாதாம் பவுடருடன் சிறிது பால் சேர்த்து கலந்து அந்த கலவையைக் கொண்டு ஸ்க்ரப் செய்யவும். இதனால் சருமம் பளபளப்பாவதுடன் மென்மையாக மாறும். 

மஞ்சள்: ஆன்டி - ஆக்சிடன்ட் என்பதால் சருமத்தில் உள்ள கிருமிகளுக்கு எதிராகப் போராடுகிறது. மேலும் புத்துணர்வைத் தருகிறது, பொலிவடையவும் உதவுகிறது. 

கற்றாழை: தோல் சுருக்கத்தைக் குறைத்து மிகவும் வயது முதிர்வு தோற்றத்தைத் தடுக்கிறது. முகப்பருக்கள் வராமலும் தடுக்கிறது. 

பாசிப்பயறு மாவு/கடலைமாவு ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டு அத்துடன் சிறிது பால் அல்லது தயிர் சேர்த்து ஸ்க்ரப் செய்யவும். இதனை பேக்காகவும் போடலாம். 

இதுதவிர குளிர் காலத்திலும் அதிகம் தண்ணீர் அருந்த வேண்டும், பழச்சாறுகளும் தொடர்ந்து அருந்தலாம், அடுத்து முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். இதுவும் சருமம் வறண்டு போவதைத் தடுக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.