ஆண்களிடம் கேட்கக் கூடாத சில கேள்விகள் என்னென்ன?

ஆண்களிடம் கேட்கக் கூடாத சில சங்கடமான கேள்விகளை கேட்கக் கூடாது.
ஆண்களிடம் கேட்கக் கூடாத சில கேள்விகள் என்னென்ன?
Published on
Updated on
1 min read

ஆண்களிடம் சில சங்கடமான கேள்விகளை கேட்கக் கூடாது. கேட்கக் கூடாத சில கேள்விகளின் பட்டியல்:

* வெளியூரில் இருந்து சொந்த ஊர் திரும்பி இருக்கும் இளைஞனிடம், இத்தனை வருடம் வெளியூர் சென்று சம்பாதித்தப் பணம் இவ்வளது தானா எனக் கேட்கக் கூடாது.

* தன் திருமணத்தை தள்ளி வைத்து இருக்கும் ஆணிடம், தலையில் முடி உதிர்ந்துவிட்டதே, இன்னும் திருமணம் ஆகவில்லையா எனக் கேட்கக் கூடாது.

* வேலை தேடும் இளைஞனிடம், எப்போது நீ பணிக்கு செல்வாய் எனக் கேட்கக் கூடாது.

* துன்பத்தில் அழும் இளைஞனிடம், பெண் பிள்ளை போல் ஏன் அழுகிறாய் எனக் கேட்கக் கூடாது.

* திருமணமாகி இருக்கும் இளைஞனிடம், இன்னும் குழந்கைகள் இல்லையா எனக் கேட்கக் கூடாது.

* சொந்த வீடு வாங்க இயலாத இளைஞனிடம், இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா எனக் கேட்கக் கூடாது.

* வாகனம் ஓட்டத் தெரியாத இளைஞனிடம், வாகனம் வாங்கவில்லையா அல்லது வாகனம் ஓட்டத் தெரியாதா எனக் கேட்கக் கூடாது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com