/

கிவி பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!

கிவி பழம் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த பழம் மற்றும் இதில் ஆரோக்கிய நன்மைகள் அதிகம் உள்ளது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 12:14 pm IST

கிவி பழத்தில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது மற்றும் இதில் ஆரோக்கிய நன்மைகள் அதிகம் உள்ளது.

நார்ச்சத்து, வைட்டமின் சி, ஃபோலேட், தாமிரம், பொட்டாசியம், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே போன்ற முழு அளவிலான ஊட்டச்சத்துக்களை கிவி பழம் கொண்டுள்ளது. 

1. ரத்தம் உறைவதைத் தடுக்கிறது

ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் ரத்தம் உறைவதைத் தடுக்கவும், ரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும் கிவி பழம் உதவுகிறது. 

2. ஆஸ்துமாவுக்கு உதவுகிறது

மூச்சுத்திணறல் என்பது ஆஸ்துமாவின் பொதுவான அறிகுறி ஆகும். கிவியில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் ஆஸ்துமாவின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும். தொடர்ந்து கிவியை உட்கொள்பவர்களுக்கு நுரையீரல் செயல்பாடு மேம்பட்டதாக ஒரு ஆய்வு நிரூபித்துள்ளது.

3. செரிமானத்தை மேம்படுத்துகிறது

கிவியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. நார்ச்சத்து தவிர, கிவியில் ஒரு நொதியும் உள்ளது. இது குடலில் உள்ள புரதங்களை செரிக்க உதவுகிறது.

4. ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களைத் தடுக்கவும் கிவி பழம் உதவுகிறது. கிவியில் உள்ள வைட்டமின் சி ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

5. எடையை குறைக்க உதவுகிறது

உடல் எடையை குறைக்க விரும்புவோர் கிவி பழத்தை சாப்பிடலாம். கிவியில் அதிக நீர்ச்சத்து உள்ளது. குறைந்த கலோரிகள் கொண்டதாக உள்ளது. மேலும், கொழுப்பின் அளவை கிவி பழம் கட்டுப்படுத்துகிறது.

கிவி பழத்தில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனையை மேற்கொண்டு அளவோடு கிவி பழத்தை சாப்பிடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.