கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நம்பிக்கையும் உண்மையும்: மன அழுத்த மருந்துகள் போதைப்பொருளா? எவ்வளவு நாள்களுக்கு சாப்பிடலாம்?

மன அழுத்தத்தைப் போக்க வழங்கப்படும் மருந்துகள் போதைப்பொருளா? அவற்றை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டுமா? ஒருமுறை எடுக்கத் தொடங்கிவிட்டால் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டுமா? 

News image
Updated On :26 செப்டம்பர் 2023, 12:34 pm

DIN

மன அழுத்தத்தைப் போக்க வழங்கப்படும் மருந்துகள் போதைப்பொருளா? அவற்றை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டுமா? ஒருமுறை எடுக்கத் தொடங்கிவிட்டால் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டுமா? 

மன அழுத்த மருந்துகள்/மாத்திரைகள் (antidepressantsx-ஆண்டிடிப்ரசண்ட்ஸ்) குறித்த தவறான நம்பிக்கைகளுக்கு பதில் அளிக்கிறார் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மனநல மருத்துவத் துறையின் துணை பேராசிரியர் டாக்டர் ஆர். ஜெயசீலன். 

மன அழுத்த மருந்துகள் போதைப்பொருளாக இருக்கலாம். 

மன அழுத்தத்தைப் போக்குவதற்கு வழங்கப்படும் மருந்துகள் போதைப்பொருள் இல்லை. ஆனால் திடீரென இந்த மருந்துகளை உட்கொள்வதை நிறுத்துவது எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம். இந்த அறிகுறிகள் சில நாட்களில் சரியாகிவிடும். 

மன அழுத்த மருந்துகளை எடுக்கத் தொடங்கிவிட்டால் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும்.

ஒவ்வொரு நபரைப் பொருத்தும் சிகிச்சையின் காலம் மாறுபடும். சிலருக்கு இது நீண்ட காலத் தேவையாக இருக்கலாம். சிலருக்கு குறுகிய காலம் தேவைப்படலாம். மருத்துவ பரிசோதனைக்குப் பின்னரே மன அழுத்த மருந்துகளை நிறுத்த வேண்டும்.

Story image

மன அழுத்த மருந்துகளை நீண்ட காலத்திற்குப் பயன்படுத்துவது சிறுநீரகத்தை சேதப்படுத்தும். 

இது தவறானது. எனினும் எந்தவொரு மருந்தையும் நீண்ட காலத்திற்கு பயன்படுத்தும்போது வழக்கமான பரிசோதனைகளைச் செய்வதும் பக்கவிளைவுகளைக் கண்காணிப்பதும் அவசியம்.

மன அழுத்த மருந்துகளை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை

கண்டிப்பாக தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும், ஒழுங்கற்ற முறையில் மருந்துகளை எடுத்துக்கொள்வது பலனளிக்காது. 

மன அழுத்த மருந்துகளை உட்கொள்வது ஒருவரின் குணாதிசயங்களை மாற்றும். 

இல்லை. இந்த மருந்துகள் முக்கிய குணாதிசயங்களை மாற்றாது. ஒருவரின் நடத்தை மற்றும் மனநிலை மாற்றங்களைத் தணிக்கவே அவை பயன்படுத்தப்படுகின்றன. உண்மையில் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு வழங்கப்படும் மருந்துகள், நோயாளிகளை மனச்சோர்வு அறிகுறிகளில் இருந்து விடுத்து இயல்பு நிலைக்குத் திரும்ப உதவுகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.