மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, செய்யறிவு தொழில்நுட்ப (ஏஐ) போட்டியில் கூகுள்தான் முதலிடத்தில் இருக்க வேண்டியது என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட், ஓபன்ஏஐ உடன் இணைவினால் இந்த போட்டியில் முதலிடத்தில் உள்ளபோதும் கூகுளிடம் தவிர்க்க முடியாத வளங்களும் திறன்களும் இருப்பதை சத்ய நாதெல்லா ஒப்புக்கொண்டுள்ளார்.
இது குறித்து, “கூகுள் கடுமையான போட்டி தரும் நிறுவனம். அவர்களிடம் திறனும் கணக்கீடும் உண்டு. தகவல்கள் முதல் சிலிகான் வரை, வடிவமைப்பு முதல் தயாரிப்பு மற்றும் பகிர்மானம் வரை அவர்களிடம் எல்லாமும் உண்டு” என பாட்காஸ்ட் ஒன்றில் பேசும்போது நாதெல்லா குறிப்பிட்டுள்ளார்.
நாதெல்லாவின் இந்த சீண்டல் கூகுளின் மீது ஏஐ போட்டியில் அழுத்தத்தை உண்டாக்கியுள்ளது.
சமீபத்தில் கூகுளின் ஏஐ வெளியீடான ஜெமினை உருவாக்கும் படங்கள், வரலாற்று சரித்தன்மை இல்லாததால் பலரின் விமர்சனத்துக்கும் உள்ளானது. பாரபட்சமற்ற செய்யறிவு தொழில்நுட்பத்தை உருவாக்க கூகுளுக்கு சமூக வலைதள பயனர்கள் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக நிதிச் சுமைக்கு மத்திய அரசே காரணம்: துரை வைகோ குற்றச்சாட்டு!

நிதிஷ்குமாா் நிலை எனக்கு ஏற்படாது: புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி

வன்னியா்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கிடைக்காததற்கு திமுக அரசே காரணம் - அன்புமணி ராமதாஸ்

நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் : உதயநிதி
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


