தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

ஏஐ மூலம் நேரத்தை மிச்சப்படுத்தும் சேவை பணியாளர்கள்

News image
மாதிரி படம்- ஐஏஎன்எஸ்
Updated On :6 மே 2024, 9:50 am

DIN

நாட்டின் சேவை பணியாளர்களில் 94 சதவிகிதத்துக்கும் அதிகமான பேர், செய்யறிவு (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் எனப்படும் ஏஐ, அவர்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதாக கருதுகின்றனர் என சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

முன்னணி மென்பொருள் நிறுவனமான சேல்ஸ்ஃபோர்ஸ் நடத்திய ஆய்வில், செய்யறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்களில் பணியாற்றும் 89 சதவிகிதம் பணியாளர்கள் இந்த தொழில்நுட்பம் செலவுகளைக் குறைப்பதாக தெரிவித்துள்ளனர்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரிப்பதால் ஏஐ மூலம் கிடைக்கக் கூடிய உற்பத்தித் திறன் அதிகரிப்பு, செலவினங்கள் குறைவு மற்றும் வாடிக்கையாளர் அனுபவம் ஆகியவை முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்த ஆய்வு 30 நாடுகளில் 5,500 சேவை பணியாளர்களிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

93 சதவிகிதத்துக்கும் அதிகமான நிறுவனங்கள், ஏஐ தொழில்நுட்பத்தில் முதலீட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

மூன்று முக்கியமான இடங்களில் தற்போது ஏஐ பயன்படுத்தப்படுவதாக ஆய்வு குறிப்பிடுவதாவது: தானியங்கி விளக்க சுருக்கங்கள் மற்றும் அறிக்கைகள் தயாரிப்பு, அறிவார்ந்த சலுகைகள் மற்றும் பரிந்துரைகள், அறிவுசார் ஆவண உருவாக்கம்.

மேலும் 79 சதவிகித அமைப்புகள், இந்த ஆண்டு சேவை துறைகள் மூலம் அதிக வருவாய் பங்களிப்பு இருக்கும் என ஆய்வு குறிப்பிட்டுகிறது.

85 சதவிகித சேவை நிறுவனங்கள் இந்தாண்டு அதிக பட்ஜெட்டை எதிர்பார்ப்பதாகவும் 80 சதவிகிதத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் அதிக பணியாளர்களை எதிர்பார்ப்பதாகவும் ஆய்வு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.