மணப்பாடு பறவைகள் சரணாலயம்!

அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வசிக்கும் செங்கால் நாரை, வண்ண நாரை, வெள்ளை நாரை எனப் பல பறவைகள் இப்பகுதிக்கு வந்துள்ளன.
மணப்பாடு கடற்கரையோரம் சிறகடித்துப் பறக்கும் பறவைகள்.
மணப்பாடு கடற்கரையோரம் சிறகடித்துப் பறக்கும் பறவைகள்.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு கடற்கரையோரம் ஆயிரக்கணக்கான அழகிய வெளிநாட்டுப் பறவைகள் வருகை தந்திருப்பது இப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இயற்கையான அழகிய மணல் குன்றுகள், பரந்து விரந்த நீண்ட கடற்கரை, ஓங்கி உயர்ந்த கலைநுட்பம் மிக்க கிறிஸ்தவ ஆலயங்கள், கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ள அழகிய வீடுகள் எனப் பார்க்கும் இடம் எல்லாம் வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் அமைந்துள்ளது மணப்பாடு கிராமம்.
இயற்கை அன்னை வரைந்த அழகிய எழில் ஓவியம்போலக் காணப்படும் இந்தக் கிராமத்தில் தற்போது அழகிய வெளிநாட்டுப் பறவைகள் ஆயிரக்கணக்கில் குவிந்து அங்கும் இங்குமாக பறந்த வண்ணம் உள்ளது பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இப்பறவைகளைக் காண சுற்றுப் பகுதி ஊர் மக்களும் திரண்டு வருகின்றனர். இதுகுறித்து மணப்பாடு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரூபஸ் கூறும்போது, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வசிக்கும் செங்கால் நாரை, வண்ண நாரை, வெள்ளை நாரை எனப் பல பறவைகள் இப்பகுதிக்கு வந்துள்ளன. முன்பு இதுபோல நவம்பர், டிசம்பர் மாதங்களில் பல வெளிநாட்டுப் பறவைகள் வந்துள்ளன. அதிகளவில் பறவைகள் வந்திருப்பது இதுவே முதல்முறை என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com