உதாரணமாக சென்னையில் அர்ச்சனா என்ற பெண்மணியைச் சந்தித்தோம். அவர் ஒரு பட்டதாரி. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து பின் ஏதோ சூழ்நிலை காரணமாக வேலையை விட்டுவிட்டார். அதனால் அவரது குடும்பம் மிகவும் வறுமையில் இருந்தது. அவர், சிறு தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல வங்கிகளை அணுகி அலுத்துப்போன நிலையில்தான் எங்களை அணுகினார். அவருக்கு Byst மூலம் நிதி உதவியும், மோகன் சிதன் என்ற வழிகாட்டியையும் அவருக்கு துணையாக கொடுத்தோம். அவர், கேட்டிரிங் தொழில் தொடங்கி, உணவு தயாரித்து ஐடி நிறுவனங்களில் விற்பனை செய்து வருகிறார். தற்போது அவரிடம் 92 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். ஆண்டிற்கு 2.2.கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார்.