‘தினமணியும் நானும்’ - வாசகர் நடராஜனிடம் இருந்து வந்த மின்னஞ்சல்!

எமெர்ஜென்சி கால விதி முறை .... பத்திரிகை தொழிலே முடங்கி அடங்கும் நேரத்திலும் "அடங்க மாட்டேன் நான்" என்று  அடக்குமுறைக்கு எதிராக துணிவுடன் பத்திரிகை தர்மத்தை காத்து இந்த நாட்டின் ஜனநாயக மலரை மீண்டும் 
‘தினமணியும் நானும்’ - வாசகர் நடராஜனிடம் இருந்து வந்த மின்னஞ்சல்!

எனக்கும் தினமணிக்கும் உள்ள பந்தம் இன்று, நேற்றல்ல... மே 1976 நான் 

இந்தியன் எக்ஸ்பிரஸ் , தினமணி சென்னை அலுவலகத்தில் ஒரு அக்கௌன்டன்ட் ஆக எக்ஸ்பிரஸ் எஸ்டேட்ஸ் வளாகத்தில் நான் என் 25ஆம் வயதில்  பணியில் சேர்ந்த அன்று தொடங்கியது மறக்க முடியாத அந்த வசந்த ஆரம்பம் !
தினமணி ஒரு ஆலமரம்.... அதன் நிழலில் நான் கற்றுக் கொண்ட பாடமும் அனுபவமும் என்னை ஒரு குரு குல வாச மாணவனாக மாற்றியது அந்த குருகுலம்! கட்டுக்கோப்பான அலுவல் பணி... கணினி ஏதும் இல்லாத காலத்திலேயே கணினி வேகத்தில் நடந்த அலுவல் பணி ....இன்று நினைத்தாலும் எனக்கு ஒரு பிரமிப்பு !

எமெர்ஜென்சி கால விதி முறை .... பத்திரிகை தொழிலே முடங்கி அடங்கும் நேரத்திலும் "அடங்க மாட்டேன் நான்" என்று  அடக்குமுறைக்கு எதிராக துணிவுடன் பத்திரிகை தர்மத்தை காத்து இந்த நாட்டின் ஜனநாயக மலரை மீண்டும் மலர செய்த மாமனிதர் திரு RNG அவர் காட்டிய வழியில் நான் பணி  ஆற்றிய  அந்த நேரம் என் வாழ்வில் பொன்னான நேரம்.

இரண்டு வருட தினமணி அலுவல் பணியில் நான் சந்தித்த சாதனையாளர் பலர் அங்கே! அவருள் , தினமணி ஆசிரியர் திரு  A.N .சிவராமன் {ANS}

தினமணி கதிர் ஆசிரியர் திரு. T.K.தியாகராஜன் {TKT},ROTARY PRESS, திரு .D.S .ராகவன், NewsPrint Manager திரு சுந்தரம், உதவி மேனேஜர் திரு .H.சிவகுமார், புகைப்பட நிபுணர் Mr.Harry Miller என்று பல பிரபலங்களை சொல்லலாம். கணக்கு பிரிவு பணியை மிகவும் சீரிய முறையில் கட்டுக் கோப்பாக நடத்தி சென்ற திரு.ராஜ் நாராயண், திரு குப்புசாமி ஐயர் , திரு R.சேதுராமன்.

இவர்களுடன் நியூஸ்ப்ரின்ட் வேஸ்ட் என்னும் இழப்பை மிகத் துல்லிய முறையில் கணக்கிட்டு கண்காணித்த திரு லோபெஸ் என்னும் அலுவலரை நான் மறக்க முடியவில்லை. 
மேலும் கணக்கு பிரிவில் பணியாற்றிய  வெங்கடராமன், கிருஷ்ணன், நாராயணன் சுந்தரேசன், சுந்தரம், ராமமூர்த்தி, கோபாலகிருஷ்ணன், ராமச்சந்திரன், அமீனுதீன், ராமநாதன் போன்ற சிலர் இன்னும் என் நினைவில் நிற்கிறார்கள். திரு  L சேஷன், தினமணி கதிர் இதழின் cost price and sale price மதிப்பீடு செய்யும் பணியில் திறமையுடன் திகழ்ந்த திருமதி K.H.லலிதா என்னும் என் சக அலுவலரையும்  இன்றும் நினைத்துப் பார்க்கிறேன் .

அந்த கால கட்டத்தில்  திரு R.ராமகிருஷ்ணன், எக்ஸ்பிரஸ், தினமணி மற்றும் எக்ஸ்பிரஸ் குழுமம் பத்திரிகை அனைத்துக்கும் "RK " என்னும் ஒரு மந்திர சொல்லாக இருந்தார் என்பது அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மை! தொழிற்சங்க நல்லிணக்கத்துடன் தொழிலாளர் ஆசிரியர் என்னும் சீரிய பணியை திறம்பட செய்து வந்த திரு. தேவராஜு , மற்றும் டைம் கீப்பர் திரு கோவிந்தசாமி இவர்களின் அயராத பணித்திறன் கண்டு வியந்து இருக்கிறேன் நான்! 

1976ல்  முடிவடைந்த என் தினமணி தொடர்பு,  39 ஆண்டுக்குப் பிறகு 2015ல் கவிதைமணி வாசகர் கவிதை வாயிலாக மீண்டும் அரும்பி மலர்ந்து இன்று வரை மணம் வீசுவது பார்த்து என் இதயம் இசைக்குது ஒரு இனிய ராகம் தினமும்! 

 'தாய் நாடு தாண்டி  அயல் நாட்டில் பணி புரிந்து மீண்டும் 

தன்  நாடு திரும்பி அன்னையின் மடியில் புது உலகம் 

காணும் ஒரு " குழந்தை" போலவே   என்னை மாற்றி  

விட்டது வாசகர் கவிதை, கவிதைமணி !

அகவை 85 காணும் தினமணி தொடர வேண்டும்

அதன் பணி , ஆண்டு 100 தாண்டியும் !

அகவை 69ல்  அடி எடுத்து வைக்கப் போகும் நான் 

சொல்லவேண்டும் நன்றி தினமணிக்கும்,

என் கவிதைக்கு ஒரு முகவரி தந்த கவிதைமணி 

வாசகர் கவிதைக்கும் !'


K.Natarajan

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com