ஈ, எறும்புக்குக் கூட கெடுதல் நினைக்காதவர்களாக இருந்தால், இது உங்களுக்கானது இல்லை!

வீட்டில்  எறும்புத்  தொல்லை அதிகமிருந்தால் தூள் பெருங்காயத்தை தூவிவிட்டால்  எறும்புத் தொல்லை  இருக்காது.
ஈ, எறும்புக்குக் கூட கெடுதல் நினைக்காதவர்களாக இருந்தால், இது உங்களுக்கானது இல்லை!
Published on
Updated on
1 min read
  • வீட்டில் எறும்புத் தொல்லை அதிகமிருந்தால் தூள் பெருங்காயத்தை தூவி விட்டால்  எறும்புத் தொல்லை  இருக்காது.
  • ஒரு டம்ளர்  நீரில் 2 தேக்கரண்டி  தூள் உப்பை கலந்து அதை  அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால்  எறும்புத் தொல்லை குறையும்.
  • வெயில் காலங்களில் ஈக்களின் தொல்லை அதிகம் இருக்கும்.  அதனைப் போக்க, வீட்டைத்  துடைக்கும்  நீரில் சிறிது  உப்பைச் சேர்த்து பின்பு துடைத்தால் அந்த அறையில் ஈக்கள்  வராது.
  • காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை அலமாரியில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
  • தேனீ கொட்டி விட்டால்,  உடனே ஒரு பெரிய வெங்காயத்தை  நறுக்கி  கடி வாயில் வைத்தால், அது விஷத்தை உறிஞ்சிவிடும்.
  • பிரஷர் குக்கரை உபயோகப்படுத்தாத நேரங்களில்  மூடி வைக்கக் கூடாது.
  • இஞ்சியை ஈரத் துணியில் சுற்றித் தண்ணீர்க்  குடத்தின் மீது  வைத்திருந்தால் பத்து நாள் வரை புதிதாகவே  இருக்கும்.
  • வெண்ணெய்யில் லேசாக  உப்பைத் தூவி வைத்து விட்டால் பல நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
  • பீங்கான் பாத்திரங்களை உப்பு  கலந்த தண்ணீரில் கழுவினால் அவை பளபளவென்று பிரகாசிக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com