மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆபத்து, நெருக்கடின்னா இனி இது தான்... புதிய எமர்ஜென்சி ஹெல்ப்லைன் எண் 112 குறித்து சில தகவல்கள்...

3 முறை இந்த எண்ணை தங்களது ஸ்மார்ட் ஃபோன் மூலமாக அழைத்தால் போதும். சம்மந்தப்பட்ட சேவை அமைப்புகளுக்கு அந்த அழைப்பு அவசர அழைப்பாகப் பதிவு செய்யப்பட்டு கடத்தப்பட்டு உடனடி உதவி கிடைக்கும் என்கிறார்கள்.

News image
Updated On :21 பிப்ரவரி 2019, 5:27 am

கார்த்திகா வாசுதேவன்

அமெரிக்காவின் 911 ஐப் போல இந்தியாவிலும் சிங்கிள் எமர்ஜென்சி ஹெல்ப் லைன் நம்பர் நேற்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண் நாடு முழுவதும் அடுத்தாண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. 

இந்த எண்ணை ஆப் மூலம் ஸ்மார்ட் ஃபோன்களில் தரவிறக்கி வைத்துக் கொண்டால் ஆம்புலன்ஸ்கான எமர்ஜென்சி எண் 108, போலீஸ் கண்ட்ரோல் ரூம் சர்வீஸுக்கான எமர்ஜென்சி எண் 100, தீயணைப்புப் படைக்கான எமர்ஜென்சி எண் 101,  தனித்திருக்கும் பெண்களுக்கான பாதுகாப்பு எமர்ஜென்சி எண் 1090, ஹெல்த் ஹெல்ப் லைன் எண் 108 இவற்றையெல்லாம் தனித்தனியாக கஷ்டப்பட்டு ஞாபகம் வைத்துக் கொண்டு அவசரம் நேர்ந்தால் தனித்தனியாக அழைக்கத் தேவையில்லை என்கிறார்கள். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 112 சேவை எண். மேற்கண்ட அனைத்து எமர்ஜென்சி எண்களையும் ஒரே எண்ணின் கீழ் இணைத்து ஒருங்கிணைத்து வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம். ஆபத்து காலங்களிலோ அல்லது நெருக்கடி நேரங்களிலோ இந்த எண்ணை அழைத்தால் போதும் மற்றெல்லா சேவைகளையும் இயக்க முடியும் என்கிறார்கள். 

Story image

இந்தப் புதிய சேவை எண் தற்போது இந்தியாவில் ஆந்திர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கேரளா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு, குஜராத், புதுச்சேரி,  லட்சத்தீவு, அந்தமான், தாத்ரா நகர்ஹவேலி,  டாமன், டையூ மற்றும் ஜம்மு கஷ்மீர் என மொத்தம் 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அனைத்திலும் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சேவையைப் பயன்படுத்த நேர்பவர்கள் 3 முறை இந்த எண்ணை தங்களது ஸ்மார்ட் ஃபோன் மூலமாக அழைத்தால் போதும். சம்மந்தப்பட்ட சேவை அமைப்புகளுக்கு அந்த அழைப்பு அவசர அழைப்பாகப் பதிவு செய்யப்பட்டு கடத்தப்பட்டு உடனடி உதவி கிடைக்கும் என்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.