தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

பணக்காரர் ஆக வேண்டுமா? இந்த 5 பழக்கங்கள் கட்டாயம் தேவை!

பணக்காரர் ஆவதற்கு உதவும் பழக்கங்கள் பற்றி...

money

கோப்புப்படம் - IANS

Published On :17 அக்டோபர் 2025, 6:16 pm IST

பணக்காரராக வேண்டும் என எல்லாருக்குமே விருப்பம்தான். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல. ஒரே நாளில் நடந்துவிடும் விஷயமுமல்ல. அதற்கு கடினமாக உழைக்க வேண்டும். படிப்படியாக உழைப்பை அதிகரித்து சேமிப்பைக் கூட்டி இறுதியாக அடைவதே ஆகும். இதற்கு நீண்ட நெடும் காலம் ஆகலாம். வெகு சிலருக்கு மட்டுமே இது எளிதாக கிடைக்கிறது.

இதற்காக சில பழக்கங்களை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். பணக்காரர் ஆகாவிட்டாலும் சேமிப்பைக் கூட்ட அதற்கான வாய்ப்புகளைப் பெற இந்த பழக்கங்கள் உதவும்.

சேமிப்பு

பண சேமிப்பு என்பது ஒரே நேரத்தில் நடப்பதல்ல. நாள்தோறும் நம்முடைய பழக்கவழக்கங்களினால் கட்டமைக்கப்படுகிறது. இதற்கு முதலில் சேமிப்பை கடைப்பிடிக்க வேண்டும். நாள்தோறும் ஒரு தொகை அல்லது சம்பளம் வந்தவுடன் ஒரு தொகையை சேமிப்புக்கு என்று ஒதுக்கிவைத்துவிட வேண்டும். முதலில் இது கடினமாக இருந்தாலும் தொடர்ந்து கடைப்பிடிக்கும் பட்சத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.

படிக்க வேண்டும்

பணம், சேமிப்பு, வணிகம் ஆகியவை குறித்து தினமும் எதையாவது படிப்பது உங்களின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். சேமிப்பு பற்றி தினமும் படிக்கும்போது அதனைச் செய்யத் தூண்டும். அதேபோல வணிகத்தில் வெற்றி பெற்றவர்கள் பற்றி படிக்கலாம். இது உங்கள் மனநிலையை கூர்மைப்படுத்துவதுடன் உங்கள் சிந்தனைத் திறனை அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற வழிவகுக்கும்.

செலவுகளைக் கண்காணிக்க வேண்டும்

வரவுக்கேற்ற செலவு வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் வரவைவிட செலவு குறைவாக இருக்க வேண்டும். இதற்கு நீங்கள் செலவழிப்பதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு மாதம் பட்ஜெட் போட்டு அதற்கேற்ப செலவு செய்ய வேண்டும். எதற்காக எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என நீங்கள் இதன் மூலமாக தெரிந்துகொள்ள முடியும்.

முதலீடு தேவை

செல்வந்தர் ஆவதற்கு சேமிப்பு மட்டும் போதாது, முதலீடு தேவை. இப்போது பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், தங்க பாத்திரங்கள், பி.எஃப் என பல சேமிப்பு வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றில் முதலீடு செய்து வருமானத்தை பெருக்க வேண்டும்.

பொறுமை வேண்டும்

பணத்தை பெருக்க முயற்சிப்பவர்கள் மிகவும் பொறுமையுடன் இருக்க வேண்டும். மற்றவர்களிடமிருந்து நிதி சார்ந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். தனக்கு எல்லாம் தெரியும் என்று இருக்கக் கூடாது. பணத்தை படிப்படியாக பெருக்கி ஒருகட்டத்தில் வெற்றி வரும்போது அதையும் புத்திசாலித்தனமாகக் கையாண்டு மேலும் வளம் பெற வேண்டும்.

இவையெல்லாம் மிகவும் எளிமையான பழக்கங்கள்போல தோன்றினாலும் இதனை அமைதியாகக் கடைப்பிடிக்கும்பட்சத்தில் பணக்காரர் ஆகவில்லை என்றாலும் பொருளாதாரம் சார்ந்து உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும்.

Summary

5 small habits that quietly make a person rich

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.