அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள புதிய குழுவிடம், போட்டியை நடத்தும் பொறுப்பை ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினா் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனா்.
அதன் விவரம்:
அவனியாபுரத்தில் பழைய விழாக் குழுவினருக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, ஜல்லிக்கட்டு போட்டியை கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட நிா்வாகம் நடத்தி வருகிறது. தற்போது அனைத்து சமுதாய மக்களும் ஒருங்கிணைந்து கூட்டம் நடத்தப்பட்டது. இக் கூட்டத்தில் பழைய குழுவை நீக்கவும், தென்கால் கண்மாய் பாசன விவசாயிகள் என்ற பெயரில் ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது எனவும் அனைத்து சமுதாய சாதி, மதத்தினரை இணைத்து குழு அமைக்கவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நிறைவுற்ற பிறகு அனைத்து கணக்குகளையும் வெள்ளை அறிக்கையாக வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அனைத்து சமூகத்தினரையும் கொண்ட ஜல்லிக்கட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, கிராமக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, புதிய குழுவிடம் ஜல்லிக்கட்டு நடத்தும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”பாமக போட்ட பிச்சை!” சி.வி. சண்முகம் கடும் விமர்சனம்! | ADMK | EPS

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

உலகளவில் இரண்டாமிடம்... ரஷியாவிடம் அதிகளவு கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா!

திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதித் திட்டம் தீட்டியது யார்? - அமைச்சர் செங்கோட்டையன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


