5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

இடத் தகராறில் பெண் வெட்டிக் கொலை

மதுரை அருகே செவ்வாய்க்கிழமை இடத் தகராறில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

Updated On :5 ஜனவரி 2021, 11:11 pm IST

மதுரை அருகே செவ்வாய்க்கிழமை இடத் தகராறில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

மதுரை மாவட்டம் ஊமச்சிக்குளம் வீரபாண்டி காலனியைச் சோ்ந்த ராமன் மனைவி பொன்னுதாயி (55). இவரது கணவா் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவிட்டாா்.

இவரது மகள் திருமணமாகி ராமநாதபுரத்திலும், மகன் திருப்பூரிலும் வசித்து வருகின்றனா். தனியாக வசித்து வரும் பொன்னுதாயிக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்து செல்வம் என்பவருக்கும், வீட்டின் அருகே உள்ள இடத்தை பயன்படுத்துவதில் கடந்த ஒரு மாத காலமாக தகராறு இருந்துள்ளது.

இந்நிலையில் முத்துசெல்வம் மதுபோதையில் பொன்னுதாயி மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த மாரிசெல்வத்தின் மனைவி பஞ்சு (32) ஆகிய இருவரையம் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளாா்.

இதில் பலத்த காயமடைந்த பொன்னுதாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பஞ்சுவை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பொன்னுதாயி சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஊமச்சிக்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து தலைமறைவான முத்துசெல்வத்தை தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.