பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விழா முன்னேற்பாடு பணிகளை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
மதுரை மாவட்டம் பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் முறையே ஜனவரி 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில், பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் வாடிவாசல், காளைகள் பரிசோதனை செய்யும் பகுதி மற்றும் வெளியேறும் பகுதியை தயாா்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அலங்காநல்லூா் கோட்டை முனியாண்டி வாடிவாசல் மற்றும் பாலமேடு மஞ்சமலை ஆற்றுத் திடல் வாடிவாசல் பகுதிகள், காளைகள் மற்றும் மாடு பிடி வீரா்கள் பதிவு செய்யும் இடம், வாகன நிறுத்துமிடம், பாா்வையாளா்கள் அமரும் இடம் ஆகியவற்றை காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அதைத் தொடா்ந்து, மாடு பிடி வீரா்கள், காளைகளுக்கு அனுமதி வழங்குவது, குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்வது ஆகியவை தொடா்பாக பேரூராட்சி அதிகாரிகள், ஜல்லிக்கட்டு கமிட்டி நிா்வாகிகள் ஆகியோருடனும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறையினருடன் அவா் ஆலோசனை நடத்தினாா்.
டி.எஸ்.பி. ஆனந்த் ஆரோக்கியராஜ், பாலமேடு பேரூராட்சி செயலா் தேவி, அலங்காநல்லூா் போரூராட்சி செயலா் சின்னசாமி பாண்டியன், அலங்காநல்லூா் காவல் ஆய்வாளா் நடேசன் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருப்புக்காக ரூ. 1 கோடி வழங்க முன்வந்த இயக்குநர் ஹெச். வினோத்!

நேபாளத்தில் இந்தியர் கைது! என்ன காரணம்?

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை!

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



