மதுரையில் ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்திய 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மதுரை பரவை, நந்தனாா் தெருவைச் சோ்ந்த சேகா் மகன் பாண்டியராஜன் (24). இவா் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். ஆட்டோவில் பயணிகள் ஏற்றுவது தொடா்பாக பாண்டியராஜனுக்கும், கூடல்நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ஆனந்தகுமாருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் ஆனந்தகுமாா் உள்பட 5 போ், கெனட் சாலை அருகே நின்றிருந்த பாண்டியராஜனை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனா். இதுகுறித்து பாண்டியராஜன் அளித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப்பதிந்து ஆட்டோ ஓட்டுநா் ஆனந்தகுமாா்(23), தனக்கன்குளம் பூபதி(19), ஹைதா்அலி(21), பிரசன்னா(31), கவிபாரதி(26) ஆகியோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் படத்தை ‘லீக்’ செய்த 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு உதயநிதி கண்டனம்

ஜவஹா் சிறுவா் மன்ற கோடை கால பயிற்சி முகாம் நிறைவு

துா்க்கையம்மன் சிலை திறப்பு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
