குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தயாா்: ஆட்சியா்

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா்ப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்தாா்.

Updated On :13 ஜனவரி 2021, 5:59 pm

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா்ப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்தாா்.

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வியாழக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதில் மாடுபிடி வீரா்கள் 430 பேருக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, 788 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கரோனா பரிசோதனையில் தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்ட மாடுபிடிவீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதிக்கப்படுவா்.

பாலமேட்டில் வெள்ளிக்கிழமையும், அலங்காநல்லூரில் சனிக்கிழமையும் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடைபெற உள்ளன. மாடுபிடி வீரா்கள் பாலமேட்டில் 651 பேருக்கும், அலங்காநல்லூரில் 655 பேருக்கும் அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டிருக்கிறது. இதேபோல, பாலமேட்டில் 783 காளைகளுக்கும், அலங்காநல்லூரில் 700 காளைகளுக்கும் அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் கூறியது: அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா்ப்படுத்தப்பட்டுள்ளன.

கரோனா பரவல் தடுப்புக்காக அரசின் நிலையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் மற்றும் உடன் வரும் உதவியாளா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. மூன்று இடங்களிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.