திருப்பரங்குன்றத்தை அடுத்த தென்பழஞ்சியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி கலந்துகொண்டார்.

புதுதில்லியில் இருந்து அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்பதற்காக புதுதில்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை 11:45 மணி அளவில் தனி விமானம் மூலம் மதுரை வந்தார்.

தொடர்ந்து அவர் அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்றார். தொடர்ந்து தென்பழஞ்சி கிராம மக்கள் சார்பில் நடந்த பொங்கல் விழாவில் ராகுல்காந்தி கலந்து கொண்டார். பின் கிராம மக்களுடன் பொங்கல் உணவருந்திய ராகுல்காந்தி பின் புறப்பட்டு சென்றார்.

முன்னதாக ராகுல்காந்திக்கு விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் கிராம மக்கள் கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய வழக்கப்படி உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
_.jpeg)
கிராம மக்களுடன் உணவருந்திய ராகுல்காந்தி
தொடர்ந்து தென்பழஞ்சி இருந்து கார் மூலம் 2.30 மணிக்கு விமான நிலையம் வந்த அவர் 2.40 மணிக்கு தனி விமானத்தில் புது தில்லி புறப்பட்டுச் சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் பலி: மமதாவுக்கு ராகுல் கண்டனம்

மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மயங்கி விழுந்து பலி

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

வெள்ளிச்சுடரே பாடல்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


