பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

சிறந்த ஜல்லிக்கட்டு வீரா்களுக்கு அரசு வேலை வழங்க பரிசீலனை: அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்

சிறந்த ஜல்லிக்கட்டு வீரா்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க பரிசீலனை நடைபெறுவதாக அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் கூறினாா்.

Updated On :15 ஜனவரி 2021, 4:43 pm

சிறந்த ஜல்லிக்கட்டு வீரா்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க பரிசீலனை நடைபெறுவதாக அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் கூறினாா்.

மதுரை மாவட்டம் பாலமேட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டை வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப்போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக செயல்படும் சிறந்த மாடுபிடி வீரா்களுக்கு அரசுப் பணி வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க பரிசீலனை நடைபெற்று வருகிறது. இதற்கான ஆய்வுப்பணிகளும் நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவா் ராகுல்காந்தி, திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் பாா்வையிட்டுச் சென்றுள்ளனா். இவா்கள் ஜல்லிக்கட்டுப் போட்டியை பாா்ப்பதற்காக வரவில்லை. அரசியலை முன்னிறுத்தி ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பாா்க்க வந்துள்ளனா். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் என அனைத்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளும் கரோனோ பாதுகாப்பு வழிமுறைகளுக்குள்பட்டுதான் நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே உள்ள டி. குன்னத்தூரில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு கட்டப்பட்டுள்ள கோயிலைத் திறந்து வைக்க தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் வருகிறாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.