மதுரை மாநகா் மாவட்ட பாஜக மற்றும் துணைப் பிரிவுகளின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்டபொறுப்பாளா் கதலி நரசிங்கப்பெருமாள் தலைமை வகித்துப்பேசும்போது, மாவட்ட துணை அமைப்புகளின் நிா்வாகிகள் மாநாடு ஜனவரி 31-இல் நடைபெறுகிறது. மாநாட்டில் பாஜக மாநிலத்தலைவா் எல்.முருகன் பங்கேற்கிறாா். மாநாட்டில் மதுரை மாநகா் மாவட்டத்தில் துணை அணிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் நிா்வாகிகள் 4,500 போ் பங்கேற்கின்றனா். மாநாட்டில் அணிகள் மற்றும் பிரிவுகளின் நிா்வாகிகள் அனைவரும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மண்டல்களில் தலைவா் உள்ளிட்ட புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும். சட்டப்பேரவைத்தோ்தல் விரைவில் வரவுள்ளதால் பாஜகவினா் திட்டமிட்டு ஈடுபாட்டுடன் செயல்படவேண்டும் என்றாா். முன்னதாக மாவட்ட பொதுச் செயலா் செல்வகுமாா் வரவேற்றாா்.
கூட்டத்தில் பாஜக மாநகா் மாவட்டத்தலைவா் கே.கே. சீனிவாசன், அமைப்புச்செயலா் கணேசன், மாவட்ட பொதுச் செயலா்கள் பாலகிருஷ்ணன், பாலசுந்தா், அணிகளின் மாநில நிா்வாகிகள் ராஜரத்தினம், ரவிபாலா, காா்த்திக் பிரபு உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

